Pages

சனி, 8 மே, 2010

AKSHAYA THRITHIYAI -1

                                              
  GODDESS LAKSHMI
KUBERA YANTHRAM 
                    
அட்சய திரிதியை 
                                                                                                திருமதி சாந்தா வரதராஜன் 

   அட்சய திரிதியை ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு மூன்றாம் நாள் வரும். அன்று திருத்தலங்களுக்குச் சென்று இறையருள் பெறுவதால் வாழ்வு நலம் பெரும். அன்று, நல்லது எது செய்தாலும் ஒன்றுக்கு மூன்றாக இறைவன் பலன் கொடுப்பார் என்பர். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்-மே மாதம் 'அட்சய திரிதியை தினம்' கொண்டாடப்படுகிறது.


   'க்ஷயம்' என்றால் தேய்தல், குறைந்து போதல்,மறைதல் எனப்பல பொருள் உண்டு. 'அஷ்ய்யம்' என்றால் 'வளர்தல்' 'நிறைதல்'என்று பொருள்.'திரிதியை' என்றால் மூறாவது என்பதாகும். 'திதி' என்பது நாள், தினம் என்று பொருள். திதி (நாட்கள்)களில் சிறப்பு பெற்றது 'அட்சர திரிதியை' என்று மகாகவி காளிதாசர் தாம் அருளிய 'உத்திர காலாமிருதம்' என்ற நூலில் கூறியுள்ளார். அட்சயம் என்றால் வளருதல் எனப்படுவதால் அள்ள அள்ள வளர்ந்து கொண்டது அட்சய பாத்திரம். அதுபோல் அட்சய திரிதியை என்பது செல்வத்தினை மேன்மேலும் வழங்கக்கூடிய நாள். அட்சய திரிதியையன்று நாம் பூசிக்க வேண்டிய முக்கிய கடவுள்கள் மஹா விஷ்ணு, மஹாலஷ்மி, பரமசிவன், பார்வதி, அன்னப்பஞ்சம் போக்கும் அன்னபூரணி, கல்விச் செல்வம் தரும் கலைமகள், குறையற்ற நிதியம் தரும் குபேரன் போன்றவர்கள். அட்சய திரிதியையன்று பொன்னும் பொருளும் வாங்கி, பூசைகள் செய்து இறைவனை வணங்கினால் நன்மை உண்டாகும் எனக் கூறப்படுகிறது.


தொடரும் 
HAVE A NICE DAY.


                       
              
                                         
HAVE A NICE DAY

1 கருத்து:

  1. Ladies have become crazy about gold purchase during akshaya thrithiyai. It is interesting know the background of akshaya thrithiyai.

    பதிலளிநீக்கு

Please send your comments