முருகப் பெருமானின் முக்கிய திருத்தலங்கள்
சாந்தா வரதராஜன்
முருகப்பெருமான்,கைலை நாதன் பரமசிவ பெருமானுக்கும் , மலைமகள் பார்வதி தேவியாருக்கும் இளைய மகனாக அவதரித்தார்.
அசுரர்களை அழித்து தேவர்களை காப்பதே , இந்த அவதாரத்தின் நோக்கம். கார்த்திகை பெண்டிர்களால் வளர்க்கப்பட்ட சிறப்பினை உடையவர் .
விநாயக பெருமானின் தம்பிரான் முருகன் ,ஞ்யான சக்தியான வேலாயுதத்தை உடையவர். இச்சா சக்தியான வள்ளியாரையும் , க்ரியா சக்தியான தெய்வயானை
அம்மையாரையும் மணந்தார். மயிலை வாகனமாகவும் சேவலை
கொடியாகவும் கொண்டு ஆறுமுகத்தோடு பக்தர்களை காப்பவர்.
தமிழ் கடவுளான குமரனுக்கு ஆண்டுதோறும் விழாக்கள்,
வீதி உலா , தேர் , தெப்பம் உற்சவம் ,காவடி எடுத்தல் முதலியன.
வைகாசியில் விசாகம் ஆடியில் கிருத்திகை தை மாதத்தில் பூசம்
பங்குனியில் உத்திரம் முக்கியமான விசேஷ நாட்களாக கொண்டாடப்படுகின்றன.
குமரனுக்கு பால்,தயிர் பன்னிர் இளநீர் , சந்தனம்,பஞ்சாமிர்தம் ,
விபூதி முதலிய பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள்.குமரனை
குழந்தையாக, பாலனாக,யுவனாக,வீரனாக,பித்தனாக,வேடனாக,
கிழவனாக, ஆண்டியாக,அரசனாக,மயில் வாகனத்தின் மீது sakthi
வேலுடன் சேவல் கொடியுடனும் வள்ளி,தெய்வயானையுடன் ஆருமுகமாகவும்
அலங்காரங்கள் செய்து பக்தர்கள் மகிழ்வார்கள்.பரம்பொருள் ஒன்று தான்,
நாம் காணும் காட்சிகள்தான் பல உருவங்களில் உள்ளது என்பதை குறிக்கும்.
தொடரும்
KNOW ABOUT OUR CULTURE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments