Pages

வியாழன், 26 நவம்பர், 2009

Thiruchendhur-1

உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-4
திருமதி சாந்தா வரதராஜன் .                                  
2.திருச்செந்தூர்                                 


   இது பெருமை பெற்ற முருகன் தலம். இது திருநெல்வேலி மாவட்டத்தில், கடற்கரையில் அமைந்த இரண்டாம் படை வீடாகும். செந்தில், அலைவாய், திருச்செந்தில், திருச்சீரலைவாய், திருச்செந்தூர், ஜெயந்திபுரம், சந்தனாசலம், என்ற பற்பல பெயர்கள் இப்பகுதிக்கு உண்டு. சங்க இலக்கியங்களில் செந்தில்,அலைவாய் என்றும், தேவாரத்தில் செந்தில் என்றும்,திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. முருகனுக்கு            சேந்தன்       என்ற பெயரும்   உண்டு. அவன்     குடிகொண்டிருப்பது  சேந்து   இல் , என்பது  செந்தில் என்றாகி , பின்னர்  செந்தூர்  என்று  வழங்கியது  என்றும், ஜெயந்திபுரம் என்பது  செந்தூர்  ஆக     மருவுயது   என்றும் சிலர்   கூருவர்  .


   கிரௌஞ்ச  மலையை பிளந்து தாரகாசுரனை கொன்றபின் ஆறுமுகன் செந்திலில் வந்து தங்கி செந்திலாண்டவனாக காட்சி அளிக்கிறார். வீரமகேந்த்ரம் சென்று சூரபதுமாதியரை அழித்து திரும்பி வந்த ஆறுமுகன் சினம் தணிந்து பக்தர்களை காப்பாற்றியதால் கந்தன் என்றும் அவனது கருணையை கந்தன் கருணை என்றும் கூருவர். குமரகுருபரர்   ஊமையாக      இருந்தவர் . இந்த      செந்தில்  ஆண்டவன் அருளால்  பேசும் சகதி        பெற்று  பிள்ளை  தமிழ்  பாடினார். ஆதிசங்கரர்    திருச்செந்தூர்  ஆண்டவனை  பற்றி சுப்பிரமனிய புஜங்கம் என்ற பாடலை இயற்றினார்.                          


 ஆண்டுதோறும் 3 நாட்கள் கந்தசஷ்டி விசேஷமாக கொண்டாடுவார்கள். மேலும் ஆடி திருக்கிருத்திகை, தைகிருத்திகை விசேஷமானது.   
                    மணி மேலும் ஒலிக்கும்.  
                               ஓம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments