Pages

செவ்வாய், 14 டிசம்பர், 2010

DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL

HAVE A NICE DAY

       
தன்வந்திரி பகவான்
       

        திருமதி சாந்தா வரதராஜன் 

                உலக உயிர்கள் யாவும் இன்புற்று வாழவும், மாந்தர்கள் தம் உடல் நோயும், அதனால் வரும் உள்ளபிணியும் நீங்குவதற்கும் கருணைக்கடல் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் அருள் வேண்டும்."Health is Wealth"  என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப உடல் நலத்தோடு இருந்தால்தான் மற்ற எல்லாம் தானே வந்து சேரும் என்பர்.எந்த உடல் நலக்குறைவும் வராமல் இருக்கவும், அப்படி வந்தால் மிக விரைவாகக் குணமாகவும், ஆரோக்கியம் நிலைக்கவும், மக்களுக்கு "தன்வந்திரி" பகவானின் ஆசி பூரணமாக கிட்டுவதற்கு கீழ்காணும் மந்திரங்களைப்  பக்தியுடன் கூறினால் நன்மை உண்டாகும்.


       "ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்தரையே அமிர்த கலச ஹஸ்தாய,
          சர்வாமய வினாசனாய, த்ரைலோக்ய நாதாய ,ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா"      


   இதன் பொருளாவது "மகா விஷ்ணுவின் மறு அவதாரமான ஸ்ரீ தன்வந்திரி பகவானே! அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி எல்லா உயிர்களின் நோய்களைக் குணப்படுத்தும், மூன்று உலகங்களுக்கும் தலைவனே! வணங்குகிறோம் உன்னை! நலம் தருவீர் உடனே!"


   ஸ்ரீ தன்வந்திரி பகவான் எவ்விதம் உதயமானார் என்பதை முதலில் அறிவோம். ஆயுளும் ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக, அமரர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அமுத கலசத்தினைக் கரங்களில் ஏந்தி வெளிப்பட்டார் தன்வந்திரி பகவான். வெண் பட்டாடை ஒளி வீச,அமுதக் குடத்துடன் தோன்றிய அவரைக் கண்டதும் சுரர்களும், அசுரர்களும் ஆனந்தம் அடைந்தனர்.


 தொடரும் 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments