Pages

சனி, 22 ஜனவரி, 2011

ANNAI THERASA

HAVE A NICE DAY

 அன்னை தெரசா        
       கவிஞ்ஞர்களின் பார்வையில் 
        அன்னை தெரசா  
            இயற்றியவர் : 
  கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன் 
       அன்பும் கருணையும் 
        அன்னையின் நற்குணங்கள் 
        அற்புத சேவைகள் 
         அன்னை தெரசாவின் இயல்புகள் 


       திண்ணிய மனமும் 
       தெளிந்த அறிவும் 
       அன்னியர் ஆயினும் 
       தொண்டுகள் புரியும் பண்பாளர் 


       தனக்கென்று வாழா 
       பிறருக்கு உதவுபவர் 
       தன்னலம் கருதா 
       சேவையில் உயர்ந்த உத்தமர் 


     தொழு நோயாளிகள் 
     தொழும் தெய்வம் - இவர் 
     மக்கள் சேவையே 
     மகேசன் சேவை என வாழ்ந்தவர் 


    இவரது இயற்பெயர் ஆக்னெஸ் 
    இன்முகம் இனிய சொல்லுடன் 
    இவர் ஆற்றிய சேவைகள் 
    இணைந்து அளித்த பெயர் 'தெரசா'


    பல்வேறு சாதனைகளுக்கு 
    பாரத ரத்னா விருதும் 
     உலக சமாதானத்திற்கு 
    உன்னத நோபல் பரிசும் பெற்றவர் அன்னை.


                             -------------------  
   










   











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments