Pages

புதன், 31 ஆகஸ்ட், 2011

VINAI THEERKUM VINAAYAKAR

HAVE A NICE DAY


 SIDHI BUDHI VINAYAKAR
    வினை தீர்க்கும் விநாயகர் 


  திருமதி சாந்தா வரதராஜன் 


     நமது நாட்டில் எல்லோரும் விநாயகப் பெருமானை முதற் கடவுளாக வணங்குகிறோம். எந்த நல்ல காரியமானாலும் விநாயகரை பிரார்த்தித்து,சங்கல்பம் செய்து கொண்ட பின்னரே மக்கள் எதனையும் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.ஆகவே தான் நாம் "பிள்ளையார் சுழி" போட்டு எழுதும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது.


     "விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் 
   விநாயகனே வேட்கை தணிவிப்பான்.-விநாயகனே
   விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் 
    கண்ணிற் பணிமின் கனிந்து."


என்ற பாடல் விநாயகப் பெருமானின் பெருமையை விளக்குகிறது.


  ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானின் பிறந்த  நாளை நாம் கொண்டாடுகிறோம். இந்த நன் நாள் 'விநாயக சதுர்த்தி' என்று கொண்டாடப்படுகிறது. முக்கண்ணன் பரமசிவனுக்கும் , மலைமகள் பார்வதி தேவிக்கும் மூத்த மகனாக அவதரித்தவர் 'விநாயகர்'.முருகப்பெருமானின் மூத்த சகோதரரான இவரது பெருமைகளை விளக்கும் வகையில் இவருக்கு பல சிறப்பு பெயர்கள் உள்ளன. பூத கணகளுக்கு தலைவனாக இருப்பதால் 'கணபதி' என்றும் , நதிக்கரையிலும் , அரசமரதடியிலும் இவர் வீற்றிருப்பதால் 'பிள்ளையார்' என்றும் ,பிறையை தலையில் அணிந்திருப்பதால் 'பாலச்சந்திரன்' என்ற திருநாமமும், வல்லபைக்கு அருளியதால் 'வல்லப கணபதி' என்றும் , சிந்துராஜன் என்ற அசுரனை வதம் செய்ததால் 'சிந்தூர' என்றும், மூஷிகன் என்ற கொடியவனை அழித்தால் 'மூழிகவாகனன்' என்றும், கஜமுகாசுரனை வதம் செய்ததால் 'கஜானன்' என்றும் பெயர்கள் உள்ளன.


தொடரும் 




   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments