Pages

சனி, 4 பிப்ரவரி, 2012

sangada hara chathurthi viradham-2

HAVE A NICE DAY



                                  2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-2
  
 திருமதி சாந்தா வரதராஜன்   

              இன்முகத்தோடு இந்திரனை வரவேற்ற மன்னன் சூரசேனன் அமரர்கோன் அங்கு வந்த காரணம் வினவினான். அதற்கு இந்திரன் தான் புண்ணியசீலரான 'புருசுண்டி' முனிவரைத் தரிசிப்பதற்காக பூலோகம் வந்ததாகவும், அவரைப் பார்த்துவிட்டு விண்ணுலகம் செல்வதற்காக விமானத்தை கிளப்பும்போழுது தாழ்வான செயலில் ஈடுபடும் ஒருவனின் பார்வை பதிந்ததால், விமானம் மேலே பறக்காது, தாழ்ந்துவிட்டது. எனவே தேவலோகம் செல்ல முடியாது பூமியில் புண்ணியம் மிக்க மன்னன் நாட்டில் இறங்கியதாகக் கூறினான். மேலும் மன்னனிடம் ஓர் உதவி வேண்டினான். அதாவது,அவரது நாட்டில் சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கும் எவராவது அவரை அழைத்து, அவரது விரத பலனை, அவர் இந்திரனுக்கு தந்தால், அவன் மீண்டும் தேவலோகம் செல்ல முடியும் என்று கூறினான்.

       உடனே சதுர்த்தி விரதம் இருப்பவரைத் தேடிப்
பணியாட்களை அனுப்பிய பின் அரசன் சூரசேனன் இந்திரனிடம், அவ்வளவு உயர்வான,ஒப்பற்ற பெருமையுடைய 'புருசுண்டி' முனிவர் யார்? என்று வினவினான். பின்னர் புராண வரலாற்றை இந்திரன் மன்னனிடம் கூறினான். கொலையும்,கொள்ளையும் செய்ய கொஞ்சமும் தயங்காத விப்ரதன் எனும் வேடன் ஒருவன் தண்டக ஆரண்யத்தில் வசித்து வந்தான். ஒருசமயம் , அவன் முர்களர் எனும் முனிவரை வழி மறைந்து கொள்ளையடிக்க முயன்றான். முற்றும் துறந்த அவரிடமிருந்து அவன் எதிர்பார்த்த பொருள் எதுவும் கிடைக்காததால் ஆத்திரமடைந்து, அவரை கொல்ல முயன்றான்.கோபத்தோடு தன்னை கொல்ல வந்த விப்ரதனை அனுதாபத்தோடு நோக்கினார் அந்த முனிவர். அவரது விழிகளில் இருந்த வீரியம் மிக்க ஒளி, விப்ரதனின் தீவினைகளை தீய்த்தது. அதன் காரணமாக முனிவரை அடித்து கொல்ல வந்த விப்ரதன், அவரது அடிகளைப் பிடித்து பணிந்தான்.கருணைமிக்க  முனிவர் 'ஓம் கணேசாய நம:' என்ற கணேச மந்திரந்தை அவனுக்கு உபதேசித்தார். அதோடு காய்ந்து போன கழி ஒன்றைத் தரையில் ஊன்றி, பட்டுப்போன இந்தக் கொம்பு, உன் பக்திக்கு துளிற்கும்வரை இந்த மந்திரத்தை இடைவிடாது சொல் என்று சொல்லிவிட்டுப் போனார் முரகல முனிவர்.

தொடரும்.

  

1 கருத்து:

Please send your comments