Pages

சனி, 20 அக்டோபர், 2012

mudhiyor nalan

HAVE A NICE DAY


                               
           

                            senior-couple-enjoying-a-day-at-the-lake


       முதியோர் நலன் 
     திருமதி சாந்தா வரதராஜன்

  மூப்பென்பது எல்லோர்க்கும் பொது தான் 
   முதுமையே இளையோரின் வழிதானே!
   மூப்பென்பது நோயோ,பாவமோ அல்ல;
   முதியோரை எப்போதும் மதிக்கலாமே!

    அடிமையாக முதியோரை நடதிடாமல் 
    ஆறறிவை ஐந்தறிவாய் ஆக்கிடாமல் 
    துடிக்குமவர் மனதிலுள்ள துன்பம் கேட்டு 
    துயற்படுவோரின் குறைகளை நீக்கலாமே!

     மனிதநேயம் பேசுவது வெறும் பேச்சுதானா?
    மனதிலதைக் கடைப்பிடித்தால் முதுமை              வாழுமே!
      தப்பொன்றும் அவர் செய்ய வில்லையே! 
     தர்ம சிந்தனையுடன் முதியோரில்லம் தவிர்க்கலாமே!

      முதுமையில்தான் பெருமை எல்லாம் தேடிவரும் 
      முற்றாத காயில் என்ன இனிமை வரும்?
      முதுமையில்தான் சிந்தனையில் தெளிவு வரும்!
      மூர்கதனம் நீங்கி பொறுமை வரும்!

       நெஞ்சிலே இளமை பொங்கும் இனிய நினைப்பும் 
       நிம்மதியும் முதுமைக்கு இளமை சேர்க்கும்!
      முதுமையில்தான் சீலமெல்லாம் சேர்ந்து வரும்.
       மொத்தத்தில் முதுமைதான் பெருமையின் சிகரம்.

      இளமையில் உறுதுணையாய் வழிகாட்டிய 
      முதியோரின் பெருமை உணர்ந்து - நாம் 
      விழுதுகளாய் முதியோரின் நலன் பேணினால் 
      விண்ணும் மண்ணும் நம்மை வாழ்த்துமே!

                                    சுபம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments