Pages

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

THIRUVAVINANKUDI




உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-திருவாவினன்குடி   -Part-1
திருமதி சாந்தா வரதராஜன் 


"படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர்தான் முடிக்கின்றிலை முருகா வேன்கிலை முசியமாலிட்டு மிடிக்கின்றிலை பரமானந்த மேற் கொளவிம்மி விம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே" என்பது கந்தரலங்காரம் செய்யுள். இந்த ஸ்தலத்தின் சிறப்பினை பல புலவர்கள், பக்தர்கள், தொண்டர்கள் ஆகியோர் பிள்ளை தமிழ், கோவை,மாலை, அந்தாதி,வண்ணங்கள்,பள்ளு போன்ற பாக்களை இயற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


4 .திருவேரகம் - சுவாமிமலை 


 இது முருகப்பெருமானின் நான்காம் படை வீடு. இங்கு சுவாமிநாதனாக முருகர் காட்சியளிக்கிறார். கி.பி.15  ம் நூற்றாண்டில் இருந்ததாக கருதப்படும்அருணகிரிநாதர்,திருவேரகம் என்பது கும்பகோணதிர்கருகில் உள்ள சுவாமி மலை என்று பல திருப்புகழ் பாடல்களில் பாடியுள்ளார்.அவர் "நடியிர்காவிரியாற்றுக்குள்ளே பயில் வளமை சோழ நன்னாட்டுக்குள் ஏறக நகர், என்றும், வளைகுல மலங்கு காவிரியின் வடபுரன்சுவமி மலை மிசை விளங்கு தேவர் பெருமானே" என்றும் கூறியிருக்கிறார்.இதனால் சோழ நாட்டிலுள்ள காவிரிக்கு வடகரையிலுள்ள இக்கோவில் சுவாமி மலைக்கு அண்மையிலுள்ள ஏரகம் என்று மருவியதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூருகின்றனர்.


  ஈர ஆடையுடன் சுவாமியை தரிசனத்திற்கு செல்லும் வழக்கம் சுவாமிமலையிலும் காணப்படுகிறது
வழிபடசெல்பவர்கள் காவிரியில் நீராடி,பெரும்பாலும் ஈர ஆடையுடன் தான் சுவாமிநாதனை வணங்கச் செல்கின்றனர்.


தொடரும் 
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments