Pages

சனி, 23 ஜனவரி, 2010

THIRUTHANI-4






உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- திருத்தணி-4
திருமதி சாந்தா வரதராஜன்   


  மேலும் 
 "ஐயனே நினையன்றிஎங்கணும்
 பொய்யநேர் கொறா புகலிலாமையால்   
வெய்யனே னென வெறுத்து விட்டிடேல்     
மெய்யனே திருத்தணிகை வேலனே"


என்று இராமலிங்க அடிகள் பாடியுள்ளார். மாதத்தில் கிருத்திகை சிறந்த திருநாள், அடிக்கிருத்திகை,கார்திகைக் கிருத்திகை, மாசி கிருத்திகை விசேஷமாக கொண்டாடபடு கின்றன.இங்கு பக்தர் பற்பல காவடி எடுப்பது வழக்கம். முக்கியமாக புஷ்ப
காவடி எடுப்பது. அப்பொழுது சரவணப் பொய்கையில் தெப்பத் திருவிழா நடைபெறும்.சித்திரையில் தெய்வயானையுடனும், மாசியில் வள்ளியம்மையுடனும் முருகப் பெருமாளுக்கு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.     


     6  பழமுதிர்சோலை 
  இது முருகப் பெருமானின் ஆராம்படை வீடாகும். திருமுருகாற்றுப்படை, "இழுமென இழி தரும் அருவிப் பழமுதிர்சோலை 
மலை கிழவோனே" என்று கூறுகிறது.
இப்பொழுது அழகர் மலை என்று வழங்கும் இடமே இரண்டு அழகர்களுக்கு உரிய தலமாக விளங்குகிறது. ஓர் அழகர் கள்ளழகர் என்று சொல்லும் சுந்தர ராஜ பெருமாள், மற்றும் ஒருவன் "என்றும் 
இளையாய் அழகியாய்" என்று போற்றும் முருகன். மதுரைக்கு வடக்கே ஏறத்தாழப் பன்னிரண்டு மைலில் இருக்கிறது. "அழகர் கோயில்" இந்தக் கோயிலில் அடிவாரத்தில் இருக்கிறது. பச்சைப் பசேலேன்ரும் காட்சிகளுடன் மலையும் அழகாகவே இருக்கிறது. சோலை மலை, திருமாலிருன்ஜோலைமலை, திருமாலிருன்குன்ரம், என்றும் இந்த மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது.


தொடரும் 


           


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments