Pages

சனி, 30 ஜனவரி, 2010

PAZHAMUDHIRSOLAI-2


உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- பழமுதிர்சோலை-2                
திருமதி சாந்தா வரதராஜன்  

   இதற்கு போகும் வழியில் முன்பு வேல் பொறித்த சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வந்தனர். அதுவே பழமுதிர்சோலை மலையாக வணங்கினர்.இப்பொழுது ஒரு முருகன் கோயிலாக எழுந்திருக்கிறது. இங்கே முருகன் சந்நிதி முன்பு இருந்ததென்பதற்குத் திருப்புகழ் சான்று தருகிறது.     
  "ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை 
          ஆறமர வந்தலம்பு துறை சேர..."

  "சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற 
  சோலைமலை வந்த கந்த பெருமாளே..."  

என்று நூபுர கங்கையும் சோலை மலையும் இணைத்து  முருகனை பாடுகிறார். சரவணப் பொய்கை இருந்ததென்று தெரிவதனால் முருகனுடைய திருக்கோயிலும் இருந்திருக்கவேண்டும்.

  "மாமனாகிய அழகனையும் மருமகனாகிய அழகனையும் தரிசித்துக் கொண்டு,
 ஆரும் இணையில் அழகா, முருகாபைத் 
 தாரணியும் மார்பா, தணி முதல்வா - காரணிந்து
 மேயதிருச் சோலைமளையுரையும் வித்தகநின்
 தூயமலர்ப்பாதம் துணை"

 என்று போற்றுவோம்.

  இனி ஆறு படை வீடுகளை தவிர தமிழ் நாட்டில் உள்ள முருகப்பெருமானின் மற்ற முக்கியமான ஸ்தலங்களை காண்போம்.

தொடரும் 

                  

HAVE A NICE DAY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments