Pages

ஞாயிறு, 23 மே, 2010

AKSHAYA THRITHIYAI - 3


அட்சய திரிதியை -3
                                                                                                திருமதி சாந்தா வரதராஜன்


  எனவே அட்சய திரிதியை தினத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவது மிகவும் சிறந்ததாம்.பாண்டவர்கள் காட்டில் இருந்த சமயம், அன்ன பஞ்சம் தீர்க்க, கண்ணன் அட்சய பாத்திரம் அளித்த தினமும் திரிதியை தினம்தான். குபேரன் சிவனருளால் சகல ஐஸ்வர்யத்தை அடைந்த தினமும் இதுதான். இதுபோன்று இன்னும் பற்பல நிகழச்சிகள் நடந்த தினம் அட்சய திரிதியை தினம்தான்.


   இனி அட்சய திரிதியை தினத்தில் செய்ய பூசை முறைகளைச சுருக்கமாக நோக்குவோம். அந்நாளில் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து, பூசை அறையில் கோலம் போட வேண்டும். லஷ்மிநாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன்(அவரவர்கள் விருப்பபடி) படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்றவேண்டும். குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் கோலதின்மீது பலகை வைத்துக் கோலம் போடவும்.ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன்,வெள்ளி, சிறிய நகைகள் போடவும்.அதற்கு சந்தனம், குங்குமம் இடவேண்டும். அதன்மீது மஞ்சள் பூசிய தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும்.இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயசம் நைவேத்யம் செய்யலாம். 


   இவ்வாறு பூசை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும் என்பர். அட்சய திரிதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாகும்.


தொடரும்                                     



HAVE A NICE DAY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments