Pages

சனி, 28 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-5

HAVE A NICE DAY


 sivapoojai 
  


சிவலிங்க தத்துவம் - 4
  திருமதி சாந்தா வரதராஜன்


    கிரஹஸ்தாஸ்ரமத்தில் இருப்பவனுக்கு ப்ரதிமா பூஜையே விதிக்கப்பட்டிருக்கிறது. நீராடி புத்தாடை உடுத்தி நிர்மலமான மனதோடு பூஜைக்கு உட்கார வேண்டும். வெறும் தரையில் அமரக்கூடாது. மரத்தால் செய்யப்ப்பட்ட பலகையில் பட்டு வஸ்திரம் விரித்து அமரவேண்டும். மான்தோல் மிகவும் விசேஷமானது. நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வது  மிகவும் அவசியமானது. கங்கையைதுதித்து மந்திர பூர்வமாக மூன்று தரம் ஆசமனம் செய்து பூஜையைத் தொடங்க வேண்டும். முறைப்படி சிவபெருமானை மந்திரங்களைச் சொல்லி லிங்கத்தில் ஆவாகனம் செய்து அர்க்கியம் முதலியன விட்டு, அத்தர்,பன்னீர், சந்தனம், முதலிய பரிமள த்ரவ்யன்களால் அபிஷேகிக்கவேண்டும்.பிறகு நீரால் அபிஷேகம் செய்து திலகம் இட்டு மலர்களை சமர்பிக்கவேண்டும். முக்கியமாக தாமரை, கொன்றை,அத்தி,மல்லிகை,ரோஜா, 
வில்வம், தர்பை,அறுகு,கருவூமத்தை,துளசி ஆகியவற்றால் மகேஸ்வரனை அர்ச்சிக்கவேண்டும்.தூபம் தீபம்,நைவேத்யம்,கற்பூர ஆரத்தி செய்து, பிரார்த்தனை முடிந்த பிறகு,பஞ்சாட்சரம் செய்து சிவச்தித்ரங்களைச் சொல்லி புஷ்பாஞ்சலி செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்.


தொடரும் 


   














   













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments