OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

vinayagar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vinayagar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜூன், 2012

sangada hara chathurthi viradham-6

HAVE A NICE DAY
                               2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
   
        விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-6
                    திருமதி சாந்தா வரதராஜன்                                 


          இத்தகய சிறப்புமிக்க சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கும் முறையை காண்போம்.முதன்முதலாக, சதுர்த்தி விரதம் ஆரம்பிக்க விரும்புவோர் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தில் இந்த விரதத்தை தொடங்க வேண்டும். அதுவும் செவ்வாய்கிழமைகளில் அமைந்தால் மிகவும் விசேஷம். சதுர்த்தி தினத்தன்று காலையில் ஸ்நானம் செய்துவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் விக்ரகம் அல்லது படத்தைப் பூஜையறையில் ஒரு மனைப் பலகையில் கோலம் போட்டு வைத்து, அதன்மேல் வைக்கவேண்டும். விநாயகருக்குப் பொட்டு வைத்து,பூச்சூடி அவர் முன்னால்  விளக்கேற்றி வைக்கவேண்டும் .


      தும்பிக்கையான் துதிகளை   மன்ம் உருகி,சொல்லி வழிபாடு செய்துவிட்டு,தூப,தீபம், நைவேத்யம் காட்டி வழபட்டு நமஸ்காரம் செய்யவேண்டும்."ஓம் கணபதயே நமஹா:" என்ற கணேச மந்திரத்தை வழக்கமான வேலைகளுக்கு நடுவில் அல்லது நேரம் கிடைக்கும்பொழுது மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டிருப்பது  நல்லது. மாலை நேரத்தில் சந்திரன் உதயமானதும் மறுபடியும் பிள்ளையாருக்குப் பூசை பண்ணிவிட்டு நிலவைப் பார்த்தபடியே சங்கடங்கள் எல்லாம் நீங்கவேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக் கொள்ள வேண்டும்.முடிந்தவர்கள்,அன்று முழுவதும் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பால்,பழம் சாப்பிடலாம்.இவ்வாறு சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்குச் சந்தோஷமும், சகல சௌபாக்கியமும்,சிறிதும் குறைவின்றிக் கிடைக்கும்.பக்தி உள்ளத்தோடு விரதம் இருப்பவர்கள் சங்கடங்களை எல்லாம் விநாயகர் தீர்த்து வைப்பார் என்பது திண்ணம்.


                                        சுபம் 

 திருமதி சாந்தா வரதராஜன்
சலங்கை பூஜை விளக்கு ஏற்றுதல்
சோளிங்கநல்லூர் 





செவ்வாய், 8 மே, 2012

sangada hara chathurthi viradham-5

HAVE A NICE DAY
2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.


          விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-5
  
                                                 திருமதி சாந்தா வரதராஜன்   


         இவைகலைத தவிர மேலும் ஒரு புராணக் கதை உண்டு.அதாவது சந்திரனின் சங்கடம் தீர்த்தவர் விநாயகர்.   ஒரு சமயம், சதுர்த்தி தினம் அன்று ஏகப்பட்ட "மோதகங்களை"த தின்று விட்டு ஏகாந்தமாக உலாவிக் கொண்டிருந்தார் ஏகதந்தர். சந்திரன்தான் அறிவுக்கு அதிபதி என்றும் மதிக்கு (காரணமானவன் என்பதால்  சந்திரனுக்கு 'மதி' என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவார்.ஒரு சமயம் சந்திரனுக்கு விதியின் செயலால் மதி கெட்டுப போயிற்று. அங்கு உலாவிக்கொண்டிருந்த விநாயகரின் உருவத்தைப் பார்த்துக கேலிசெய்து பேசத் தொடங்கினான் சந்திரன்.(சாமகர்ண) முறம் போல காது உள்ளவனே, (லம்போதரா) பெரிய வயிறு உள்ளவனே என்று ஆணைமுகனுக்கே ஆத்திரம் ஏற்படும்படி அளவுக்கு மீறிப் போனது சந்திரனின் கேலிப்பேச்சு. உடனே விநாயகர் "சந்திரனைப் பார்த்து உன் அழகு மீது உள்ள ஆணவத்தால், இவ்வாறு கேலி பேசுகிறாய். உன் அழகைப் பார்த்து ரசிப்பவர்கள்,இனி உன்னைப் பார்த்தாலே பாவதுக்குள்ளாவார்கள்" என்று சாபம் இட்டார்.
மறுகணமே ஒளி குன்றிக் குறைந்து,தேய்ந்து போகத் தொடங்கினான் சந்திரன். சந்திரனைப் பார்த்தல்   பாவம் வரும் என்பதால் எல்லோரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.பிள்ளையாரைக் கேலி செய்தது 'பிழை' என்பதை 'பிறை' யாக மாறிய பின்தான் உணர்ந்தான். தன் தவற்றை உணர்ந்து தன் பிழையைப் பொருத்து மன்னித்துக் குறையை நீக்கும்படி வேண்டினான். கருணைமிக்க கணேசர்,மனம் இறங்கினார். 'மதி' யின் தவறை மன்னித்தார்.

     அவனுக்கு சாபம் அளித்த ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தன்று மட்டும் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்றும்,மற்ற தினங்களில் நிலவைப் பார்பதால் எந்தப் பாவமும் வராது என்றும் அருளினார்.தேகம் தேய்ந்து மறைந்தாலும் மீண்டும் வளர்வான் என்று வரமளித்தார்.எல்லோருக்கும் மேலாக, பிறையாக இருந்த சந்திரனை, தம் சிரசின்மேல் ஏற்றி, 'பாலச்சந்திரன்' என்ற நாமம் பெற்றார் விநாயகர்.

தொடரும் 



சனி, 21 ஏப்ரல், 2012

sangada hara chathurthi viradham-4

HAVE A NICE DAY

                                      2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
                      விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-4
  
                                                 திருமதி சாந்தா வரதராஜன்   


            மகனைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் மாமுனிவர்.பின்பு முனிவரிடம் "அவனும் அவரைப்போல ஒப்பற்ற நிலை அடைந்து ,புகழ்மிக்க முனிவராக விளங்கவேண்டும். அதற்காக வழியை அவரே கூறவேண்டும் என்று அங்காரகன் பணிவுடன் வேண்டினான்.மகனின் புதிசாலிதனத்தை அறிந்து மனம் மகிழ்ந்தார் முனிவர்.தன் மகனின் எண்ணம் ஈடேற ஏகதன்தனை பூஜிப்பதுதான் ஏற்ற வழி என்றாலும், அதோடு முழு மூலப் பொருளின் மூலமந்திரத்தை மகனுக்கு உபதேசித்தார்,பாரத்வாஜ முனிவர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கு ஏற்ப,அவர் சொன்னபடியே ஆனைமுகனை நினைத்து அங்காரகன் தவமிருக்கதொடன்கினான்.

     தக்க சமயத்தில் "கணபதி" அன்காரகனுக்குக் காட்சி தந்து,வரங்கள் அருளினார். அதோடு கிரகங்களினால் ஒன்றாகத் திகழவும் அனுகிரகம் புரிந்தார்.அவன் அருள் பெற்ற (திதி) தினம் ஒரு சதுர்த்தி நாள் என்பதால் 'அங்காரக சதுர்த்தி' என்றும்,அன்றைய தினம் விநாயகரை வணங்குவோரின் சங்கடங்கள் யாவும் தீர வேண்டும் வேண்டினான்.அவன் விருப்பப்படியே ஆசியளித்தார் ஆனைமுகன். அன்று முதல் செவ்வைக்கிழமைகளில் வரும் சதுர்த்தி தினம் மிகச் சிறப்பானதாக மாரியதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன.

    "அங்காரக சதுர்த்தி சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தியாக இருக்க வேண்டும் " என்று செவ்வாய் வரம் கேட்டதால் 'சங்கடஹர சதுர்த்தி'என்று அழைக்கப்பட்டு பக்தர்கள் சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தியாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு மாதமுமே தேய்பிறைக் காலத்தில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுவதுண்டு. புதியதாக விரதம் தொடங்குபவர்கள் ,செவ்வாய்கிழமைகளில் வரும் சதுர்த்தி தினத்தில் விநாயகரை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கலாம். சதுர்த்தி விரதம் விநாயகருக்கு உகந்தது. செவ்வாய்கிழமைகளில் பூஜித்தால் சிறந்தது. 

தொடரும் 

                       
                                          திருமதி சாந்தா வரதராஜன்  &
                                               திரு வரதராஜன்                          
                 

செவ்வாய், 6 மார்ச், 2012

sangada hara chathurthi viradham-3

HAVE A NICE DAY


2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-3
  
 திருமதி சாந்தா வரதராஜன்   



     விநாயகர் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தான் விப்ரதன். முனிவர் முர்களர் சொன்னபடியே முழுமனதோடு முக்காலமும் கணேச மந்திரத்தை  விடாமல் சொன்னான். துளித்துளியாய் அவனது தீய குணம் மறைந்து பக்தி வேர் விடத் தொடங்கியது. அதே சமயம்  முனிவர் நட்டுவிட்டுப் போயிருந்த பட்டுப்போன கொம்பும்,வேர் விட்டு,பசுமைக்கு மாறித் துளிர்க்கத் தொடங்கியது. பல வருடங்கள் கடந்த பின் மீண்டும் வேடன் விப்ரதனைக் காண வந்த முரகல முனிவர் அவன் மனமும், மெய்யும்,உள்ளும் புறமும் முழுக்க முதர்கடவுளையே நினைத்துக் கொண்டிருப்பது முனிவருக்குப் புரிந்தது.இதன் விளைவாக அப்பொழுது,விப்ரதனுக்குப் புருவ மததியில் துதிக்கை தோன்றி,அவனது வடிவமும்கூட ஆனைமுகனை நினைவுபடுத்துவதுபோலவே மாறத் தொடங்கியது. முரகல முனிவர் விப்ரதனை ஆசீர்வதித்தார். மேலும், "விப்ரதா, துபிக்கையானைத் துதித்து அவரைப் போன்ற துதிக்கையும் பெற்றுவிட்ட நீ இன்று முதல் 'புருசுண்டி முனிவர்' என்று அழைக்கப்படுவாய்.மேலும் உன்னைக் கான்போருக்கும்கூட புண்ணியம் சேரும்' என்று ஆசீர்வதித்தார் முர்களர். எனவேதான் முக்காலமும் உணர்ந்த முரகல முனிவர் போற்றிப் பாராட்டிய அந்தப் புண்ணிய சீலர், "புருசுண்டி முனிவரைத்தான்,இப்பொழுது தரிசித்து வருகிறேன்" என்று மன்னன் சூரசேனன் வினாவிற்கு விடையைக் கதைமூலம் கூறினான் இந்திரன்.


      சதுர்த்தி தினங்கள் எல்லாமே சங்கடங்கள் போக்கிச் சந்தோஷம் தரக்கூடியவைதான் என்றாலும், செவ்வாய்கிழமைகளில் வரும் சதுர்த்தி தினங்களுக்கு 'சங்கடஹர சதுர்த்தி' என்றே பெயர். சங்கட ஹர சதுர்த்தியின் மகிமை பற்பல இருப்பினும் செவ்வாய் (அங்காரகன்) அருள் பெற்றதை நோக்குவோம். பாரத்வாஜ முனிவர் மகனாகப் பிறந்து, பூமொதேவியால் வளர்க்கப்பட்டவன் அங்காரகன் எனும் செவ்வாய்.அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்த தக்க வயது வந்ததும் அப்பாவான பாரத்வாஜ முனிவரைப் பார்க்கப் போனான்.


தொடரும் 


     

சனி, 4 பிப்ரவரி, 2012

sangada hara chathurthi viradham-2

HAVE A NICE DAY



                                  2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-2
  
 திருமதி சாந்தா வரதராஜன்   

              இன்முகத்தோடு இந்திரனை வரவேற்ற மன்னன் சூரசேனன் அமரர்கோன் அங்கு வந்த காரணம் வினவினான். அதற்கு இந்திரன் தான் புண்ணியசீலரான 'புருசுண்டி' முனிவரைத் தரிசிப்பதற்காக பூலோகம் வந்ததாகவும், அவரைப் பார்த்துவிட்டு விண்ணுலகம் செல்வதற்காக விமானத்தை கிளப்பும்போழுது தாழ்வான செயலில் ஈடுபடும் ஒருவனின் பார்வை பதிந்ததால், விமானம் மேலே பறக்காது, தாழ்ந்துவிட்டது. எனவே தேவலோகம் செல்ல முடியாது பூமியில் புண்ணியம் மிக்க மன்னன் நாட்டில் இறங்கியதாகக் கூறினான். மேலும் மன்னனிடம் ஓர் உதவி வேண்டினான். அதாவது,அவரது நாட்டில் சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கும் எவராவது அவரை அழைத்து, அவரது விரத பலனை, அவர் இந்திரனுக்கு தந்தால், அவன் மீண்டும் தேவலோகம் செல்ல முடியும் என்று கூறினான்.

       உடனே சதுர்த்தி விரதம் இருப்பவரைத் தேடிப்
பணியாட்களை அனுப்பிய பின் அரசன் சூரசேனன் இந்திரனிடம், அவ்வளவு உயர்வான,ஒப்பற்ற பெருமையுடைய 'புருசுண்டி' முனிவர் யார்? என்று வினவினான். பின்னர் புராண வரலாற்றை இந்திரன் மன்னனிடம் கூறினான். கொலையும்,கொள்ளையும் செய்ய கொஞ்சமும் தயங்காத விப்ரதன் எனும் வேடன் ஒருவன் தண்டக ஆரண்யத்தில் வசித்து வந்தான். ஒருசமயம் , அவன் முர்களர் எனும் முனிவரை வழி மறைந்து கொள்ளையடிக்க முயன்றான். முற்றும் துறந்த அவரிடமிருந்து அவன் எதிர்பார்த்த பொருள் எதுவும் கிடைக்காததால் ஆத்திரமடைந்து, அவரை கொல்ல முயன்றான்.கோபத்தோடு தன்னை கொல்ல வந்த விப்ரதனை அனுதாபத்தோடு நோக்கினார் அந்த முனிவர். அவரது விழிகளில் இருந்த வீரியம் மிக்க ஒளி, விப்ரதனின் தீவினைகளை தீய்த்தது. அதன் காரணமாக முனிவரை அடித்து கொல்ல வந்த விப்ரதன், அவரது அடிகளைப் பிடித்து பணிந்தான்.கருணைமிக்க  முனிவர் 'ஓம் கணேசாய நம:' என்ற கணேச மந்திரந்தை அவனுக்கு உபதேசித்தார். அதோடு காய்ந்து போன கழி ஒன்றைத் தரையில் ஊன்றி, பட்டுப்போன இந்தக் கொம்பு, உன் பக்திக்கு துளிற்கும்வரை இந்த மந்திரத்தை இடைவிடாது சொல் என்று சொல்லிவிட்டுப் போனார் முரகல முனிவர்.

தொடரும்.

  

சனி, 7 ஜனவரி, 2012

sangada hara chathurthi viradham



HAVE A NICE டே






2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
 சங்கட ஹர சதுர்த்தி பூஜை         


                           HAPPY NEW YEAR 2012


  விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம் 
  
 திருமதி சாந்தா வரதராஜன்  


      மலையரசன் முக்கனணுக்கும்,மலைமகள் உமதேவியாருக்கும் மூத்த குமாரனாக அவதரித்தவர் விநாயகர் ஆவார். நம் வினைகள் எல்லாம் தீர்பவரும் அவரே. பிள்ளையார், ஆனைமுகத்தோன், ஏகதந்தன்,ஐங்கரன்,கணேசர்,கணபதி,வக்ரதுண்டர்,விநாயகர் போன்று பற்பல நாமங்களை உடையவர். ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி நாள்தான் விநாயகரின் பிறந்த நாள். எனவே விநாயகர் பிறந்த திதியான சதுர்த்தி தினம் 'விநாயகர் சதுர்த்தி' என்று அனைவரும் ஆனந்தமாக கொண்டாடுவது வழக்கம்.


   ஒவ்வொரு மாதமும்  பிரதமை முதல் அமாவாசை அல்லது பௌர்ணமி வரையிலான திதிகள் பதினைந்தும் இருமுறை வருகின்றன. அவற்றுள் நான்காவதாக வரும் சதுர்த்தி தினம் ஐந்கரனான ஆனைமுகனை பூஜிக்க ஏற்ற தினமாகச் சொல்லப்பட்டுள்ளது.எல்லா நாட்களுமே ஏகதந்தனை வழிபட ஏற்றவை என்றாலும், சதுர்த்தி திதிக்கு சிறப்பு தனியானது.கணேச புராணத்தில் இந்திரன் சதுர்த்தியின் சிறப்பை கூறுகின்றான். 


   இனி புராணக் கதையை நோக்குவோம். ஜகத்ரபுரி நாட்டைச் சூரசேனன் எனும் மன்னன் தர்மம் தவறாது ஆண்டு வந்தான். அவன் மனைவி 
சுசீலை என்பவள் கற்புக்கரசியாக விளங்கினாள். ஒரு சமயம் அமரர்கள் அதிபதியான தேவேந்திரன்  புஷ்ப விமானத்தில் அரண்மனை அருகில் வந்து இறங்கினான்.


தொடரும் 






   
                                        




     

சனி, 24 டிசம்பர், 2011

vinai theerkum vinaayakar - 5

                   
                                                         SIDHI BUDHI விநாயகர்

                     வினை தீர்க்கும் விநாயகர் -5


                                                       திருமதி சாந்தா வரதராஜன்
 




HAVE A NICE DAY



    பிறகு கற்பூர ஆரத்தி காட்டி,பாடல்கள் பாடி பூசையை முடிக்கவேண்டும்.மறுநாள் 'புனர் பூசை' செய்யவேண்டும்.பிறகு அந்த பிள்ளையாரை ஆற்றிலோ குளம்,கிணறு முதலிய இடங்களிலோ தண்ணீரில் போட்டுவிடுவார்கள்.இவ்வாறு செய்வதன் மூலம் நமது இடையூறுகள்,தீயசக்திகள் கரைந்து நல்லது நடக்கும் என்பது ஐய்தீகம். நாம் பிள்ளையாரை அடுத்த ஆண்டு வந்து அருள்புரியுமாறு வேண்டுகிறோம்.


       நம் நாட்டில் விநாயகர் வழிபாடு தென் இந்தியாவைத் தவிர மகாராஷ்டிரம்,வங்காளம் ஆகிய இரு இடங்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரம் முதலிய இடங்களில் விநாயகரை உழவுத் தெய்வமாகவும் கொண்டாடுகிறார்கள்.(நாம் பொங்கல் திருவிழாவில் சூரிய பகவானை உழவர் கடவுளாக கொண்டாடுகிறோம்).ஆகவே விநாயகர் வழிபாட்டில் 'நெற்கதிர்' உண்டு.


     அயல்நாடுகளிலும் விநாயகர் வழிபாடு உண்டு. முக்கியமாக இந்திய நாகரிகம் வியாபித்த இடங்களில் இவ்வழிபாடு பரவியிருக்கிறது. இந்து மதத்தை போல,பௌத்தமததிலும் விக்கிரகங்களுள் 'விநாயகர்'   உருவத்தை சகஜமாக காணலாம். ஆகவே,சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மக்கள் விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். நம் நாட்டில் உள்ள சில முக்கிய சிறப்பு வாய்ந்த விநாயகர் ஆலயங்களை நோக்குவோம். அவைகள் 1. சேலம்- ராஜ கணபதி, 2 . காளஹச்தி - பஞ்சசக்தி விநாயகர். 3 . திருச்சி - மலைக்கோட்டை - உச்சிப்பிள்ளையார், 4 . மதுரை  - சந்தான கணபதி, 6 . பாண்டிச்சேரி - மணக்குள விநாயகர், 7  . ஹம்பி - கடலைகல்லு பிள்ளையார்,8 . திருவையாறு,(தஞ்சை) - பிரசன்ன கணபதி, 9 .விருதாசலம் - வல்லப கணபதி இன்னும் பல கோயில்களிலும் விசேஷமாக கணபதி எழுந்தருளியுள்ளார்.


    இக்கோயில்களுக்கு சென்று 'விநாயகப் பெருமானை' வணங்கி முழு மனதுடன் வழிபட்டால்,எடுத்த காரியம் நிறைவேறும். இன்னல்கள் தீரும். வாழ்வில் வெற்றி கிடைப்பது என்பது திண்ணம்.


சுபம் 


    

சனி, 3 டிசம்பர், 2011

vinai theerkum vinaayakar - 4

HAVE A NICE DAY


                                  

                                                             SIDHI BUDHI விநாயகர்

                                                      வினை தீர்க்கும் விநாயகர் -4


                                                       திருமதி சாந்தா வரதராஜன்
 

  கோயில்களில் அதிகாலையில் மங்கள இசை முழங்க வினாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரங்கள்,பூசைகள் இடைவிடாது நடைபெறும். மேலும் சூரியன் உதிக்கும் முன் 'கணபதி ஹோமம்' முதலிய காரியங்கள் நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்படும். கோயில்களிலும், மற்ற பொது இடங்களிலும், இசைக்கச்சேரி,பஜனை முதலியன நடைபெறும்.பொது இடங்களில் பூசிக்கப்பட்ட பெரிய உருவமாக வடிவமைந்த விநாயகரை நகர் வலம் வந்து, பின்னர் நதியிலோ அல்லது சமுதிரதிலோ விட்டு விடுவார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் வரும்படி விநாயகரை பிரார்த்திப்பார்கள். இது ஒரு ஐய்தீக முறையாகும. 


       வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம்.கோலம் போட்ட மணையில் அச்சு மண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் வைப்பார்கள். மண்டபத்தில், சின்ன வாழைக்கன்று,கட்டி, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள். பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருக்கம் பூமாலை, அருகம்புல் மாலை முதலியன அணிவித்து அலங்காரம் செய்வார்கள்.விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம்(இலை);வன்னி பத்ரம்,(இலை) அருகம்புல் இவைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என்று சொல்லப்படுகிறது.சதுர்த்தியன்று விநாயகரை இருபத்தொரு(21) வகையான இலைகளால் அர்ச்சித்தால் அர்ச்சித்தால் சிறப்பு என சொல்லப்படுகிறது. அவை, முல்லை, கரிசலாங்கண்ணி, வில்வம்,ஊமத்தை, இலந்தை,வெள்ளருகம்புல் (வேரோடு கூடியது) துளசி, கண்டங்கத்திரி, அரளி, எருக்கு, மருதை, விஷ்ணு-கிராந்தி, மாதுளை,தேவதாரு, மருவு, அரசு,ஜாதி மல்லிகை, தாழை, அகதிக் கீரை ஆகியவற்றின் இலைகளே. அர்ச்சனை செய்தபின் பலவிதமான பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம்,கொய்யாபழம்,விளாம்பழம் முதலியன நைவேத்யம் செய்யவேண்டும். இங்கு கவிகள் பாடிய கீழ்கண்ட பாடல்களை நினைவு கூறலாம்:


     "பாலும் தெளிதேனும் பாகும் பருப்ப்மிவை 
       நாளும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் 
        துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் 
       சங்கத் தமிழ்மூன்றும் தா. "            -நல்வழி 


     "கைத்தல நிறைகனி அப்பமோ டவல்பொரி கப்பிய கரிமுகன் 
       கற்றிடும் அடியவர் புதியில் உறைபவ 
        கற்பகம் எனவினை கடிதேனும்"   -திருப்புகழ் 


       மேலும் பிள்ளையாருக்கு பாயசம்,வடை,அப்பம், முதலியவைகளும் முக்கியமாக கொழுக் கட்டை பிள்ளையாருக்கு பிடித்தமானது. கொழுக் கட்டையில் மேலே மூடியிருக்கும் மாவுப்பொருள் யானைப் போர்வையாம். உள்ளேயிருக்கும் பூர்ணம், பகவானின் இனிமையான குணம். இதனை மகிமை கொண்ட கொழுக்கட்டைகளில் இருபதொன்ரை அவருக்கு நிவேதனம் செய்யவேண்டும்.


தொடரும் 


       

வெள்ளி, 18 நவம்பர், 2011

vinai theerkum vinaayakar - 3


HAVE A NICE DAY
                         
                                               
   SIDHI BUDHI விநாயகர்

     வினை தீர்க்கும் விநாயகர் -3


  திருமதி சாந்தா வரதராஜன்
                             
       அது முதல் ஏற்பட்டது தான் இந்தக் குட்டிக் கொள்ளும் பழக்கமே. இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகப் பெருமான் இல்லாத கோயில்களே கிடையாது என்று கூறலாம். பெருமாள் கோயிலில் "தும்பிக்கை யாழ்வாராக" விநாயகரை  
பூஜிக்கிறார்கள்.


       விநாயகர் உருவம் ஒரு விந்தையான உருவம்.யானைத் தலை - மனித உடல் - பெரு வயிறு - ஐந்து கைகள் என்று மனிதனுமில்லாமல் விலங்குமில்லாமலே அமைந்திருக்கின்றது. இப்படி ஒரு கடவுள் உருவம் அமைந்திருப்பதின் உண்மை என்னவெனில்,யானைத் தலை அக்ஹ்ரிணை.தெய்வ உடம்பு உயர்திணை. ஒரு கொம்பு ஆண் தன்மை; மற்றொன்று பெண் தன்மை என்று பல தத்துவங்களை உணர்த்து கின்றது. அதாவது விநாயகர் தேவராய் - மனிதராய் , ஆணாய் - பெண்ணாய் - உயர்திணையாய், அஹ்ரினையாய் விளங்குகின்றார் என்பதை புலப்படுத்துகின்றது.அவருடைய ஐந்து கைகள், படைத்தல், காத்தல்,மறைத்தல், அளித்தல், அழித்தல் என்னும் ஐவகை தொழில்களை உணர்த்துகின்றன. பெரு வயிறு, உலகங்கள் அனைத்தையும் தம்முள் அடங்கியிருத்தலை உணர்த்துகின்றது. எல்லாவிதமான சக்திகளையும் அவர் கொண்டவர்.அறிவிற்கும் அவரே அதி தேவதை. அதே போல் செல்வத்துக்கும் இடையுஊறுகளை தவிர்ப்பவர்.விநாயகரை பிரதான தேவதையாக கொண்டு வழிபடுபவர்களுக்கு 'காணபத்யர்' என்று பெயர். அவர்கள் விநாயகரின் திறுருவங்களை ஆறு விதமாக வழிபடுகின்றனர். மகா கணபதி, ஹரித்ரா கணபதி,உச்சிஷ்ட கணபதி, நவநீத கணபதி, ஸ்வர்ண கணபதி, சந்தான கணபதி என்பனவாகும்.பக்தர்கள் விநாயகரை எப்படி த்யானிக்கிரார்களோ அந்நிலையிலேயே அவர் காட்சி தந்து அருள்வார் என்று கூறப்படுகிறது.அநேகமாக விநாயகர் வீற்றிருக்கும் நிலையில்தான் உருவங்கள் காணப்படும்.நின்ற கோலத்திலும், நர்தன கோலத்திலும், சில உருவங்கள் காணப்படுகின்றன.விநாயகரின் தும்பிக்கை தும்பிக்கை இடது பக்கமே அநேகமாக திரும்பியிருக்கும்.சில உருவங்களில் அது வலது பக்கம் சுழித்திருக்கும்.அவ்வாறு காணப்படும் விநாயகருக்கு 'வலம்புரி விநாயகர்' என்று பெயர்.இனி விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும்  முறைகள் காணலாம்.விநாயகர் சுக்ல சதுர்த்தியில் ஜனனமாகையால் அன்று (விநாயகர் சதுர்த்தி) மண்ணினால் செய்த விநாயகரைத்தான் பூஜை செய்ய வேண்டும்.காரணமென்னவெனில் பஞ்ச பூதங்களில் 'மண்' முதலாவதாகும்.முழு முதல் தெய்வம் மஹாகணபதி யாவார்.ஆகையால் மண்ணினால் செய்யப்பட்ட விநாயகரை பூசை செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.பொதுவாக கோயில்களிலும்,ஆலையங்களிலும் மேலும் சில முக்கியமான இடங்களிலும் 'சதுர்த்தி' வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படும்.இத்தகைய இடங்களில் நன்கு அலங்காரங்கள் செய்து, மாவிலை தோரணம், வாழை மரம் கட்டி, கலர் விளக்குகள் போட்டு சிறப்பாக அலங்காரங்கள் செய்வதால் அந்த இடங்கள் விழாக் கோலம் பூண்டிருக்கும்.


தொடரும் 


       

வியாழன், 29 செப்டம்பர், 2011

vinai theerkum vinaayakar - 2

HAVE A NICE DAY


              SIDHI BUDHI விநாயகர்

     வினை தீர்க்கும் விநாயகர் -2


  திருமதி சாந்தா வரதராஜன் 


   தேவர்கள் துயர் தீர்க்க தேவியிநிடமிருந்து உண்டானவர்.ஐந்து முகங்களோடும்,பத்துக் கைகளிலும் ஆயுதங்களை எந்தியவராகவும் காட்சி அளித்தார். அவருக்கு 'வக்ரதுண்டர்' என்ற நாமம் இட்டு, சிங்கத்தை வாகனமாக கொடுத்தாள் தேவி. 'மகோர்கடர்' என்ற இயற்பெயர் இவருக்கு தந்தை மகேஸ்வரன் பினாகம்,சூலம், உடுக்கை, மழு, சடை,மதி முதலிய ஆயுதங்கள் கொடுத்து 'விரூபாட்சன்' 'பரசுபாணி', 'பால சந்திரன்' என்ற பெயர்கள் விளங்கசெய்தார்.தேவேந்திரனை போரில் வெற்றி கொண்டு, அவன் கர்வத்தை அடக்கியதால் 'தேவ தேவன்' என்ற பட்டமும் பெற்றார். பின்னர் ஈசன் இவருக்கு கற்பக விருட்சம், அங்குசம வச்சிராயுதம் ஆகியவற்றை கொடுத்து கௌரவித்தார். எந்த காரியத்திலும் விக்கினங்கள் (இடையூறுகள்) வராமல் நம்மை காப்பவர் 'விக்னேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். நான் முகனின் புதல்விகளான 'சித்தி' (ஞானசக்தி) 'புத்தி'(கிரியாசக்தி) இருவரையும் மணந்து கொண்டு 'கற்பக விநாயகராக' விளங்குகிறார்.

   நம் நாட்டில் எல்லாவிதமான தெய்வ வழிபாட்டிற்கும் 'விநாயகர் வழிபாடு' முதன்மை ஸ்தானம் பெற்றுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அவரை போற்றி வணங்குகிறார்கள். விநாயகர் பூசையில் மற்றொரு சிறப்பு அம்சம் உண்டு. அவரை வழிபடும் போது இரண்டு கை முட்டிகளாலும் தலையில் நெற்றிக்கொடியில் குட்டிக் கொள்கிறோம். நாம் நமஸ்காரம் செய்வதை விட விநாயகருக்கு இவை இரண்டுமே  அதிக பிரியமானவை என கருதப்படுகிறது. கஜமுகன் என்ற அசுரனின் தொல்லை பொறுக்க முடியாததால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். பிள்ளையார் ,தந்தையின் ஆணையை ஏற்று அந்த அசுரனை கொல்லத் தன் பூதகனங்களுடன் சென்று அந்த அசுரனை கொல்லத் தம் பூதகனங்களுடன் சென்று 'பெருச்சாளி' வடிவில் இருந்த அவன் அகந்தையை அடக்கி அவனை அவனை தமக்கு ஊர்தியாகக் கொண்டார்.தேவர்கள் மகிழ்ந்தனர்.பிள்ளையாரை வணங்கி அருள் பெற்றார்கள்.தேவர்கள் மகிழ்ந்தனர்.பிள்ளையாரை வணங்கி அருள் பெற்றார்கள்.அசுரனுக்கு தோப்புகரணம் இட்டது போல் 1008 முறை இட்டனர்.அது கண்ட பிள்ளையார் அவ்வளவு போடவேண்டாம்,மூன்று முறை போட்டால் போதும் எனக் கூறினார்.அதிலிருந்தே பக்தர்களுக்கு பிள்ளையாரின் முன் தோப்புக்கரணம் போடும் பழக்கம் ஏற்பட்டது. பிள்ளையாரை வணங்கும் போது தலையில் குட்டிக் கொள்வதற்கும் ஒரு புராண கதை உண்டு.அகத்தியரின் கமண்டலத்தை  காக்கை வடிவில் வந்த பிள்ளையார் காலால் உந்திவிட்டு கமண்டல நீர் காவிரியாக ஓடச் செய்தார். அகத்தியர் காக்கையை சீறினார். அது சிறுவனாக உருமாறி நின்றது. சிறுவனை இருகைகளாளுளும் தலையில் குட்ட ஓடினார். பிள்ளையார் தம் உண்மை வடிவை காட்டவே, அகத்தியர் தன் தவறை உணர்ந்து தாமே தம் தலையில் குட்டிக் கொண்டார். பிள்ளையார் 'அன்பனே, இன்று முதல் பக்தியுடன் நின்று தம் தலையில் குட்டிக் கொள்வோர் கூறிய அறிவும், சீரிய செல்வமும் பெற்று வாழ்வர்" என்றார்.

தொடரும்