OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 9 அக்டோபர், 2010

MANAKKULA VINAYAGAR-1

HAVE A NICE DAY

                மணக்குள விநாயகர் 
     
     அருள்மிகு மணக்குள விநாயகர் 
              புதுச்சேரி 
   திருமதி சாந்தா வரதராஜன் 

   பொதுவாகத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையில் 
 கோயில்களோடு கொண்டுள்ள தொடர்புகளால், தங்கள் சமய வாழக்கை, கலாசாரம், பண்பாடு மற்றும் பக்திநெறிகள் தனித்தன்மையான வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றை உலகுக்கு எட்டுதுக்காட்டுகின்றனர். கோயில்களுக்குப் புராண மெருகேற்றி இறைதன்மை மிளிரவிட்ட பெருமை தலபுராணங்களை சாரும். வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், தாழ்ந்த சென்னியும் அளித்த இறைவனை நமது (பணிகள்) கடமைகளைச் செய்யத் தொடங்கினால் அவர் செவ்வனே அப்பணியை முடித்து வைப்பார். 
    "பிள்ளையாரைத் தொழுது நாம் 
 பெருஞ் செயல்கள் தொடங்கினால் 
 உள்ளாரச் செய லெல்லாம் 
 உயர்வாய் முடியும்" 
என்பது பக்தர்களின் நம்பிக்கை. புவனேச விநாயக பெருமாள், புண்ணிய பூமியாம் புதுச்சேரியில் கடற்கரை அருகில் மணக்குள விநாயகர்" என்னும் திருப்பெயர்கொண்டு எழுந்தருளியிருக்கிறார். புதுச்சேரி என்ற பெயரைக் கேட்டவுடனே மக்களுக்கு நினைவிற்கு வருவது 'மணக்குள விநாயகர்' திருக்கோயில் அமைந்துள்ள திருத்தலம். எல்லாம் வல்ல பரம்பொருளை வழிபடும் மார்கங்களை 'ஆறு சமயங்கள்' என்பர். "ஷண்மதங்கள்" என வட மொழியில் கூறப்படுகிறது. முதல் கடவுளாக விநாயகப் பெருமானை வழிபடுவது  "காணபத்யம்" எனப்படும். கணபதியை வழிபடும் மதம் "காணபத்யம்".


தொடரும் 
   








   










                   

சனி, 2 அக்டோபர், 2010

SIVALINGA THATHUVAM-10

HAVE A NICE DAY

 சிவ பூஜை 

     

 சிவலிங்க தத்துவம் - 10

  திருமதி சாந்தா வரதராஜன்    



           "மனதால் நினைத்தாலே பாவங்கள் விலகக் கூடிய" பஞ்ச பூத லிங்கங்கள் ஐந்து ஆகும்.


  காஞ்சீபுரத்தில் பிருதுவி மயமான ஏகாம்பர  லிங்கம் இருக்கின்றது. காவேரி தீரத்தில் உள்ள ஜம்புகேசுவரத்தில் அப்புமயமான ஜம்புகேஸ்வர லிங்கம் உள்ளது. அக்கினி மயமான அருணாச்சல லிங்கம், அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையில்  இருக்கிறது. சுவர்ணமுகி  தீரத்தில் உள்ள திருக்காளத்தியில் வாயு மயமான திருமூல லிங்கம். பூலோக மகா கைலாசம் எனப்பெற்ற தில்லைவனமானது சிதம்பரத்தில் உள்ளது. இவ்வைந்து லிங்கங்களின் பெயரைக் கேட்டாலும், சொன்னாலும் மனதில் நினைத்தாலும் அப்போதே அவன் புனிதமடைகிறான் என்று சொல்லப்படுகிறது. எனவே கண்ணாரக் கண்டால் பயனை விவரிக்க வேண்டுமா? 


  மேலும், ஜோதிர்லிங்கம் பன்னிரண்டுக்கும்  உபலின்கங்கள் உள்ளன. அவற்றைக் காண்போம். சோமநாத லிங்கத்திற்கு உபலிங்கம், மஹீநதி சமுத்திர சங்கம தீரத்திலுள்ள அந்த கேசலிங்கம் ஆகும். பிருகு பர்வததுக்குச் சமீபத்திலுள்ள ருத்திர லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கத்தின் உபலிங்கம். அதேபோல மகாகாள லிங்கதிற்குத் துக்தேச லிங்கமும், ஒன்காரச்வர லிங்கதிற்குத் கர்தமேச லிங்கமும் உபலிங்கங்கலாகச் சொல்லப்பட்டுள்ளன. யமுனை தீரத்தில் உள்ள பூதேச லிங்கம் கேதார லிங்கத்திற்கு உபலிங்க மாகும். பீமசங்கர லிங்கத்திற்கு பீமேச்வர லிங்கமும், விஸ்வேஸ்வர லிங்கதிற்குச் சரச்யேச்வர லிங்கமும், திரியம்பக லிங்கதிற்குச் சிதேச்வர லிங்கமும், வைத்திய நாதலிங்கதிற்கு வைச நாத லிங்கமும் நாகேஸ்வர லிங்கத்திற்கு ஜில்லிகா சரஸ்வதி சங்கமதிலிருக்கும் பூதேஸ்வர லிங்கமும், இராமேஸ்வரா லிங்கத்திற்குக் குப்தேச்வர லிங்கமும், குஸ்மேச லிங்கத்திற்கு வியாக்ரேச்வர லிங்கமும் உபலிங்ககலாகும்.


தொடரும்