OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

திங்கள், 23 மார்ச், 2015

sangada hara chadhrthi viradham-1

     
                            திருமதி சாந்தா வரதராஜன்                    
                  சங்கடஹர சதுர்த்தி விரதம் -1          

  மலையரசன் முக்கண்ணணுக்கும் மலைமகள் உமாதேவியாருககும் மூத்த குமாரனாக அவதரித்தவர் விநாயகர் அவார் .நம் வினைகள் எல்லாம் தீர்பவரும் அவரே. பிள்ளையார் , ஆனைமுகத்தோன் , ஏகதந்தன் ,ஐங்கரன்,கணேசர்,கணபதி,வக்ரதுண்டர் ,விநாயகர்,போன்று பற்பல நாமங்கள் உடையவர். ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி தினம் விநாயகரின் பிறந்த நாள். எனவே விநாயகர் பிறந்த திதியான சத்ர்த்தி தினம் 'விநாயகர் சதுர்த்தி' என்று அனைவரும் ஆனந்தமாக கொண்டாடுவது வழக்கம்.

       ஒவொரு மாதமும்  பிரதமை  முதல் அமாவாசை அல்லது பௌர்ணமி வரையிலான திதிகள் பதினைந்தும் இருமுறை வருகின்றன.அவற்றுள் நான்காவதான வரும் சதுர்த்தி தினம், ஐங்கரனான ஆனைமுகனைப்  பூஜிக்க ஏற்ற தினமாகச சொல்லப்பட்டுள்ளது. எல்லா நாள்களுமே ஏகதந்தனை வழிபட ஏற்றவை என்றாலும், சதுர்த்தி திதிக்கு சிறப்பு தனியானது. கணேச புராணத்தில் இந்திரன் சதுர்த்தியின் சிறப்பை கூறுகின்றன.

     இனி புராணக் கதையை நோக்குவோம்.ஜகந்திரபுரி நாட்டை  சூரசேனன் என்னும் மன்னன் தர்மம் தவறாது ஆண்டு வந்தான். அவன் மனைவி சுசீலை என்பவள் கற்புகரசியாக விளங்கினாள். ஒரு சமயம் அமரர்கள் அருகில் அதிபதியான தேவேந்திரன்  புஷ்பக விமானத்தில் அரண்மனை அருகில் வந்து இறங்கினான். இன்முகத்தோடு இந்திரனை வரவேற்று மன்னன் சூரசேனன் அமரர் கோன் அங்கு வந்த காரணம் வினவினான். அதற்கு இந்திரன் தான் புண்ணிய சீலரான 'புருசுண்டி' முனிவரைத் தரிசிபதற்காகப் பூலோகம்  வந்ததாகவும்  அவரை பார்த்துவிட்டு விண்ணுலகம் செல்வதற்காக விமானத்தைக் கிளபும்போழுது தாழ்வான செயலில் ஈடுபடும்  ஒருவனின் பார்வை பதிந்ததால் விமானம் மேலே பறக்காது தாழ்ந்துவிட்டது.எனவே தேவலோகம் செல்லமுடியாது. பூமியில் புண்ணியம் மிகக மன்னன் நாட்டில்
இறங்கியதாகக் கூரினான். மேலும் மன்னனிடம் ஓர் உதவி வேண்டினான். அதாவது அவரது நாட்டில் சதுர்த்தி விரதம் கடைபிடிக்கும் எவராவது இருந்தால் அவரை அழைத்து அவரது விரத பலனை அவர் இந்திரனுக்கு தந்தால் அவன் மீண்டும் தேவலோகம் செல்லமுடியும் என்று கோரினான்.

       தொடரும்