OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 24 டிசம்பர், 2011

vinai theerkum vinaayakar - 5

                   
                                                         SIDHI BUDHI விநாயகர்

                     வினை தீர்க்கும் விநாயகர் -5


                                                       திருமதி சாந்தா வரதராஜன்
 




HAVE A NICE DAY



    பிறகு கற்பூர ஆரத்தி காட்டி,பாடல்கள் பாடி பூசையை முடிக்கவேண்டும்.மறுநாள் 'புனர் பூசை' செய்யவேண்டும்.பிறகு அந்த பிள்ளையாரை ஆற்றிலோ குளம்,கிணறு முதலிய இடங்களிலோ தண்ணீரில் போட்டுவிடுவார்கள்.இவ்வாறு செய்வதன் மூலம் நமது இடையூறுகள்,தீயசக்திகள் கரைந்து நல்லது நடக்கும் என்பது ஐய்தீகம். நாம் பிள்ளையாரை அடுத்த ஆண்டு வந்து அருள்புரியுமாறு வேண்டுகிறோம்.


       நம் நாட்டில் விநாயகர் வழிபாடு தென் இந்தியாவைத் தவிர மகாராஷ்டிரம்,வங்காளம் ஆகிய இரு இடங்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரம் முதலிய இடங்களில் விநாயகரை உழவுத் தெய்வமாகவும் கொண்டாடுகிறார்கள்.(நாம் பொங்கல் திருவிழாவில் சூரிய பகவானை உழவர் கடவுளாக கொண்டாடுகிறோம்).ஆகவே விநாயகர் வழிபாட்டில் 'நெற்கதிர்' உண்டு.


     அயல்நாடுகளிலும் விநாயகர் வழிபாடு உண்டு. முக்கியமாக இந்திய நாகரிகம் வியாபித்த இடங்களில் இவ்வழிபாடு பரவியிருக்கிறது. இந்து மதத்தை போல,பௌத்தமததிலும் விக்கிரகங்களுள் 'விநாயகர்'   உருவத்தை சகஜமாக காணலாம். ஆகவே,சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மக்கள் விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். நம் நாட்டில் உள்ள சில முக்கிய சிறப்பு வாய்ந்த விநாயகர் ஆலயங்களை நோக்குவோம். அவைகள் 1. சேலம்- ராஜ கணபதி, 2 . காளஹச்தி - பஞ்சசக்தி விநாயகர். 3 . திருச்சி - மலைக்கோட்டை - உச்சிப்பிள்ளையார், 4 . மதுரை  - சந்தான கணபதி, 6 . பாண்டிச்சேரி - மணக்குள விநாயகர், 7  . ஹம்பி - கடலைகல்லு பிள்ளையார்,8 . திருவையாறு,(தஞ்சை) - பிரசன்ன கணபதி, 9 .விருதாசலம் - வல்லப கணபதி இன்னும் பல கோயில்களிலும் விசேஷமாக கணபதி எழுந்தருளியுள்ளார்.


    இக்கோயில்களுக்கு சென்று 'விநாயகப் பெருமானை' வணங்கி முழு மனதுடன் வழிபட்டால்,எடுத்த காரியம் நிறைவேறும். இன்னல்கள் தீரும். வாழ்வில் வெற்றி கிடைப்பது என்பது திண்ணம்.


சுபம் 


    

சனி, 3 டிசம்பர், 2011

vinai theerkum vinaayakar - 4

HAVE A NICE DAY


                                  

                                                             SIDHI BUDHI விநாயகர்

                                                      வினை தீர்க்கும் விநாயகர் -4


                                                       திருமதி சாந்தா வரதராஜன்
 

  கோயில்களில் அதிகாலையில் மங்கள இசை முழங்க வினாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரங்கள்,பூசைகள் இடைவிடாது நடைபெறும். மேலும் சூரியன் உதிக்கும் முன் 'கணபதி ஹோமம்' முதலிய காரியங்கள் நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்படும். கோயில்களிலும், மற்ற பொது இடங்களிலும், இசைக்கச்சேரி,பஜனை முதலியன நடைபெறும்.பொது இடங்களில் பூசிக்கப்பட்ட பெரிய உருவமாக வடிவமைந்த விநாயகரை நகர் வலம் வந்து, பின்னர் நதியிலோ அல்லது சமுதிரதிலோ விட்டு விடுவார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் வரும்படி விநாயகரை பிரார்த்திப்பார்கள். இது ஒரு ஐய்தீக முறையாகும. 


       வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம்.கோலம் போட்ட மணையில் அச்சு மண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் வைப்பார்கள். மண்டபத்தில், சின்ன வாழைக்கன்று,கட்டி, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள். பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருக்கம் பூமாலை, அருகம்புல் மாலை முதலியன அணிவித்து அலங்காரம் செய்வார்கள்.விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம்(இலை);வன்னி பத்ரம்,(இலை) அருகம்புல் இவைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என்று சொல்லப்படுகிறது.சதுர்த்தியன்று விநாயகரை இருபத்தொரு(21) வகையான இலைகளால் அர்ச்சித்தால் அர்ச்சித்தால் சிறப்பு என சொல்லப்படுகிறது. அவை, முல்லை, கரிசலாங்கண்ணி, வில்வம்,ஊமத்தை, இலந்தை,வெள்ளருகம்புல் (வேரோடு கூடியது) துளசி, கண்டங்கத்திரி, அரளி, எருக்கு, மருதை, விஷ்ணு-கிராந்தி, மாதுளை,தேவதாரு, மருவு, அரசு,ஜாதி மல்லிகை, தாழை, அகதிக் கீரை ஆகியவற்றின் இலைகளே. அர்ச்சனை செய்தபின் பலவிதமான பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம்,கொய்யாபழம்,விளாம்பழம் முதலியன நைவேத்யம் செய்யவேண்டும். இங்கு கவிகள் பாடிய கீழ்கண்ட பாடல்களை நினைவு கூறலாம்:


     "பாலும் தெளிதேனும் பாகும் பருப்ப்மிவை 
       நாளும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் 
        துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் 
       சங்கத் தமிழ்மூன்றும் தா. "            -நல்வழி 


     "கைத்தல நிறைகனி அப்பமோ டவல்பொரி கப்பிய கரிமுகன் 
       கற்றிடும் அடியவர் புதியில் உறைபவ 
        கற்பகம் எனவினை கடிதேனும்"   -திருப்புகழ் 


       மேலும் பிள்ளையாருக்கு பாயசம்,வடை,அப்பம், முதலியவைகளும் முக்கியமாக கொழுக் கட்டை பிள்ளையாருக்கு பிடித்தமானது. கொழுக் கட்டையில் மேலே மூடியிருக்கும் மாவுப்பொருள் யானைப் போர்வையாம். உள்ளேயிருக்கும் பூர்ணம், பகவானின் இனிமையான குணம். இதனை மகிமை கொண்ட கொழுக்கட்டைகளில் இருபதொன்ரை அவருக்கு நிவேதனம் செய்யவேண்டும்.


தொடரும்