OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 24 ஏப்ரல், 2010

PUTHANDU PIRANDHADHU


     விக்ருதி புத்தாண்டு புதிதாக பூக்கட்டும். 

கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன்
  


விரோதி ஆண்டு கழிவதாலும், விக்ருதி ஆண்டு புகுவதாலும் 
விசேஷ பூசைகளாலும், புது பஞ்சாங்கம் படிப்பதாலும் 
பாரினில் புத்தாண்டு பயன்கள் பல உண்டு  பரமனின் அருளால் நலன்கள் பல உண்டு.

விருந்தில் வெல்ல பாயசமும், வேப்பம்பூ பச்சடியால்  
வாழ்வில் சுகமும், துக்கமும் இரண்டும் உண்டு 
வாழ்வினில் வெற்றியா, தோல்வியா விதிப்படி வரும் 
உற்றவை இவை என உரைவோரும் உண்டு.

இந்த புத்தாண்டு-
அன்பாலே வாழ்வினையே வென்றிடும்
அறிவாலே உலகினையே மாற்றிடும் 
பண்பாலே அனைவரையும் கவர்ந்திடும் 
பரிவாலே எவரையும் அணைத்திடும் 
பாசத்தால் உலகோரை ஈர்ந்திடும் 
பாராட்டி மனிதர்களை வாழ்த்திடும் 
நேசத்தால் மாந்தர்களை இணைத்திடும் 
நேர்மையான வாழ்கையில் வாழ்ந்திடும் 
கனிவுடன் யாவரையும் நடத்திடும் 
கண்ணான கடமையினைப் போற்றிடும் 
பணிவுடனே மக்களிடம் பழகிடும் 
பயனுள்ள செயல்களையே செய்திடும் 

இந்த புத்தாண்டில்-
உழைக்கும் கரங்கள் உயரட்டும் 
உழைப்பால் நல்வாழ்வு மலரட்டும் 
உலகம் ஒற்றுமையால் இணையட்டும் 
உரிமைகள் பல வந்து குவியட்டும் 
உலகம் செழித்திட வாழ்ந்திடுவோம் 
ஒற்றுமை ஓங்கிட வழிவகுப்போம் 
கலகம், பசி, துயர் இன்றியே தான் 
களிப்புற இறைவனை நாம் துதிப்போம் 
புத்தாண்டு பிறந்த நாளில் - நாம் 
புவிசிறக்க உறுதிமொழி ஏற்போம் 
புகழோடு, பெயரோடு வாழ - நாம் 
புதுமைகளைத் தினந்தோறும் படைப்போம் 

வருக புத்தாண்டு விக்ருதி!
வருக யாம் வாழவே!

கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன்

HAVE A NICE DAY !!                                                                        
arivaale





HAVE A NICE DAY




HAVE A NICE DAY

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

Ranganathan Street - Wikipedia, the free encyclopedia

Ranganathan Street - Wikipedia, the free encyclopedia


Ranganathan Street

From Wikipedia, the free encyclopedia

Typical Ranganathan Street
Ranganathan Street is a street in T. NagarChennaiIndia. It is located on the approach to theMambalam train station. Many commercial establishments can be found on Ranganathan Street.[1]

Contents

 [hide]

[edit]History

What is presently known as Ranganathan Street ought to have been Rangaswamy Iyengar Street after the first resident of that street. It was the usual practice then to name streets after the first resident irrespective of their class, caste or contribution.
Mr.Tupil Rangaswamy Iyengar, a retired Civil Servant of the erstwhile Madras Presidency built his house in early '20s. When civil authorities approached him for his formal approval the humble, religious and self effasive gentleman requested it be named after Lord Ranganatha ofSrirangam.
One of the busiest street in the city across India.

[edit]General

Usman Road is on one end of the street. At the other end is the Mambalam train station. On the street can be found many commercial establishments ranging from street hawkers selling safety pins to big stores selling gold jewelry. Many vegetable vendors also sell their wares on Ranganathan Street.
Throughout the year the street is FULL of people. Traditionally, it is busiest during Deepavali by nature of this street offering consumers the opportunity to purchase a variety of commodities. The most famous among the establishments on Ranganathan Street are the Saravana stores.

[edit]Commercial shops

Some of the commercial shops established in Ranganathan street include:
  1. Saravana Stores
  2. Jeyachandran textile and jewellery
  3. Rathna stores
  4. Textile India
  5. Ajmeer Fancy Stores (Ajmeer Bag Shop)
The street is a famous icon of T. Nagar and due to its proximity to Mambalam railway station, people from all parts of Chennai and Tamil Naduflock to Ranganathan Street for shopping, especially during festive seasons.
There are no residential buildings on Ranganthan street as such, but there are a few very close to the street such as Rams Flats, Narayana apartments and Kamakoti Flats on Rameswaram road.

[edit]References

  1. ^ "Not an inch to spare"The Hindu. 26 September 2007.
perinba vilas tower


HAVE A NICE DAY

சனி, 17 ஏப்ரல், 2010

SIVAPPARAMPORUL-2

சிவப்பரம்பொருள்- 2   
 சாந்தா வரதராஜன் 
 varadshantha@yahoo.com
  சகல  லோகங்களும் அழிந்து பஞ்ச பூதங்களும் ஒன்றுடன் ஒன்று ஐக்கியப்பட்டு பரம்பொருளைச் சேர்ந்து விடும். அனைத்திற்கும் எட்டாது விளங்கும் அந்தப் பரம் பொருளுக்கு தோற்றமோ, அழிவோ கிடையாது. அனைத்தும் அதனின்று உண்டாகி அதனையே அடைகின்றன. இது ஸ்ரிஷ்டியின் தத்துவம்.


  இனி, மாயனும் அயனும் கண்ட மகாலிங்கம் பற்றி அறிவோம். ப்ரக்ரிதித் தத்துவமே கண்ணைப் பறிக்கும் ஒளியோடு லிங்கமாகியது. திங்கள் சூடி,
விஷம் அருந்திய முக்கனப்பெருமானே அந்த லிங்கமாகி நின்றார். மாதவனுக்கும் பிரமனுக்கும் யார் முதல்வன்? என்ற எண்ணம் தோன்றி இருவருக்கும் வார்த்தைகள் தடித்து சண்டை உண்டாகிவிட்டது. ஒருவரையொருவர் மூர்கதனமாக அடித்துக் கொள்ளத் தொடங்கினர். தாமே முதல்வன் என்பதை நிலைநாட்ட ஒருவர் மற்றவரை அழித்துவிடும் எண்ணத்தோடு தாக்கிக்கொண்டனர். அந்தச் சமயத்தில் அவர்கள் முன்பு ஒரு பிரகாசம் தோன்றியது. திடுக்கிட்ட இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்திவிட்டுப் பார்த்தனர். கண்ணைப் பறிக்கும் பிரகாசதினிடையே அரைப்பிழம்பு ஒன்று நிற்பதைக் கண்டனர். அதன் ஆதியோ, அந்தமோ அவர்களுக்குத் தெரியவில்லை. திடீரென்று தோன்றிய இவ்வுருவம் யாதென விளங்கவில்லை. இதன் தலையோ காலோ தெரிந்தால்தானே அறிய முடியும். எனவே இதன் 'முடியை பிரமனும்', 'அடி' யை மாதவனும் கண்டுவரப் புறப்பட்டனர்.


தொடரும் 
HAVE A NICE DAY
           

சனி, 10 ஏப்ரல், 2010

SIVAPPARAMPORUL-1

   சிவப்பரம்பொருள்-1
 சாந்தா வரதராஜன் 
WEST MAMBALAM
 varadshantha@yahoo.com
  'ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி' எனவும் 'முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்,பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன்' என்று மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் சிவன் புகழை விளக்குகின்றார். அப்படிப்பட்ட சிவப்பரம் பொருளின் ஜோதி வடிவான லிங்கஸ்வரூபத்தின் பெருமையை லிங்கபுராணம் விவரிக்கின்றது.


    'உள்ளம் கசிந்துரிகி என்னிடம் செலுத்தும் அன்பிற்கு நான் அருள்செய்வேன்' என்று உமாதேவியிடம் சிவபெருமான் சொன்னதாக லிங்கபுராணம் கூறுகிறது. சூதமுனிவர் லிங்க வழிபாட்டின் மேன்மையை தவஸ்ரேஷ்டர்களுக்கு விவரித்து கூறியதே லிங்க புராணமாகும்.வியாசபகவான் எழதிய பதினெண் புராணங்களில் பதினொன்றாவதான லிங்க புராணம் இதன் மூலம் ஆகும்.இதை பக்தியுடன் கேட்பவர்கள் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்திருப்பர் என்கிறார் சூத மா முனிவர்.


    ஆதி,அந்தமின்றி,பிறப்பு,இறப்பு இல்லாது பேரொளியாக விளங்கும் ஜோதி வடிவிலிருந்து சகலலோகங்களுக்கும் ஆதாரமான லிங்கம் உண்டாயிற்று.அதனிடமிருந்து தோன்றியவர்களே பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகள்.


  தமக்கென வித்து ஏதுமின்றி அனைதுயிற்கும் தாமே வித்தாகி வளர்ந்து விஸ்வரூபியான அப்பெருமானின் படைப்பே இப்பிரபஞ்சமாகிய மாயை. பஞ்ச பூதங்களும் அவனே.ஈசானம் தத்புருஷம், அகோரம்,வாமதேவம்,சத்யோசாதம் ஆகிய ஐந்தும் அப்பெருமானுடைய முகங்கள்.
தொடரும்           

சனி, 3 ஏப்ரல், 2010

BOOK RELEASE-3

சிவ பெருமானின் மகிமையும் சிவனடியார்களும் 
   முதல்  பாகம்                                                                                
சாந்தா வரதராஜன்
contact: varadshantha@yahoo.com



பாராட்டுரை 
எஸ்.ரகுநாதன் 


 மும்மூர்த்திகளில் சிறந்தவர் சிவபெருமான் ஆவார். சிவனும்  சக்தியும் சேர்ந்தே இருந்து இப்பூவுலகினை தினந்தோறும் ஆட்டுவிக்கின்றார்கள். இதனால்தான் சர்வ சதா காலமும் சிவனை நினைப்போர் "சிவாய நம என சிந்திருந்தால் அபாயம் ஒரு நாளும் இல்லை" என்று கூறுகின்றார்கள். நாள்தோறும் காலையும்,மாலையும் நாம் சிவமந்திரம் எனப்படுகின்ற நமசிவாய,நமசிவாய, ஒம்நமசிவாயதினை ஜெபித்து வந்தால் உடலும் மனமும் ஆரோக்கியம் பெறுதலோடு இன்முகம் கொண்டு துன்பம் இல்லாமல் நாம் வாழ்வதற்குரிய பாதை வகுக்குப்படும்.


  இதனை அடிப்படையாகக் கொண்டு "சிவப்ருமானின் மகிமையும் சிவனடியார்களும்" என்ற இந்த அற்புத நூலினை ஆன்மீக உலகிற்கு ஆக்கித்தந்துள்ளார் திருமதி.சாந்தா வரதராஜன் அவர்கள். இந்த நூலினைப் படித்தும் பிழைதிருத்தம் செய்தும் தந்த பெருமையை எனக்கு அருளியது மிகுந்த மகிழிசிக்குரியதாகும்.


  சைவ சமயம் குறித்த பல்வேறு செய்திகளும், ஈசன் எனப்படுகின்ற சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களின் மகிமையையும்,சிறந்த முறையில் இந்த நூலில் தொகுத்துத் தந்துள்ளார் இந்நூலாசிரியர்.


   சிவபெருமான் படைத்த திருவிளையாடல்கள் குறித்தும் மிகவும் சிறப்புற கூறியுள்ளார். பஞ்சபூதத் தலங்கள்,அட்டவீரட்டதலங்கள்,ஜோதிர்லிங்கத்தலங்கள் முதலிய பல்வேறு சிவத் தலங்கள் குறித்து எடுத்துக் கூறியிருப்பது இந்நூலுக்கு அணி சேர்க்கிறது. 


  5 என்கிற எண்ணில் அடங்கக்கூடியதான சிவனைப் பற்றியதான பல செய்திகள் இதிலே சொல்லியுள்ளார். பிரதோஷ மகிமை குறித்தும், நந்திகேஸ்வரரின் மகிமை குறித்தும் இதிலே சிறப்பாக சொல்லியிருப்பது போற்றற்குரியதாகும்.


  சிவன் கோயில்கள் எத்தகு ஆகமப்படிக்கு அமைந்துள்ளது என்று சொல்லப்படுகின்ற செய்திகள் புதியதாக இருக்கின்றது.


    தேவாரம், திருவாசகப் பாடல்களினை ஆங்காங்கே சொல்லியிருப்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாக உள்ளது.


  குறிப்பாகத் திருவண்ணாமலையார் குறித்து மிகவும் சிறப்புடன் கூறியுள்ளார்.


   கங்கை நதியின் மகிமையும் இதில் திறம்பட எடுத்துக் கூறப்பட்டுள்ளது.


   சிவபக்தர்களுக்குரிய விரதங்களும் அவற்றைக் கடைபிடிக்கும் முறைமைகளும் இதில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.


    "அன்பே சிவம்" என்கின்ற ததுவக் கருத்து தம்மை மிகவும் தெளிவுபட இதிலே வார்த்திருப்பது சுவைபட உள்ளது.


   அத்தோடு விபூதியின் மகிமையும்,விபூதி அணிதலால் ஏற்படும் நன்மையும், சிறப்புற இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.


    பல்வேறு நூல்கள்  இந்த நூலினை சமைப்பதற்கு உரிய வடிகாலாக அமைந்துள்ளது பாராட்டுதற்குரியதாகும். சிவபெருமான் மீது பக்தி கொண்டோருக்கு இந்த நூல் வழிகாட்டியாக விளங்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.


    இது முதல் பாகந்தான். இன்னும் இரண்டாம் பாகத்தில் பல செய்திகளை சொல்லியிருப்பது தெளிவுறத் தெரிகின்றது.


  ஆன்ம நேயமும், ஆன்மீக பக்தியும் கொண்டு விளங்கும் இந்நூலாசிரியர் திருமதி. சாந்தா வரதராஜன்  அவர்கள் தமிழ்போல் வாழ்க என்று வாழ்த்தி இந்நூலினை வாங்கிப் படியுங்கள் என்று பாராட்டுரை வழங்குகின்றேன்.


தங்கள் அன்புள்ள,


எஸ்.இரகுநாதன் 


HAVE A NICE DAY