OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

SIVAPPARAMPORUL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SIVAPPARAMPORUL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஜூலை, 2010

SIVAPPARAMPORUL-6



திருவண்ணாமலை- ஜோதி  
    


  சிவப்பரம்பொருள்-6 
     திருமதி சாந்தா வரதராஜன் 
கடையுகம் அதனில் தோன்றும் 
   அண்டங்கள் கழிய உண்டு 
சுடலையில்  நடித்தாய்  போற்றி 
  சுடர் ஒளிப்பிழம்பே போற்றி 
விஷஅரவு  அணிந்தாய்  போற்றி 
   மெய்உணர்வு  எய்தி  நின்ற 
அடியவர்க்கு  அருள்வாய் போற்றி 
    அண்ணலே  போற்றி  போற்றி 


கூற்றுஉயிர்  குடித்த  பைம்பொன் 
   குழைகழல்  தானோய் போற்றி  
ஏற்று உயர்கொடியாய் போற்றி 
     ஈடிலா முதலே போற்றி 
ஆற்றரும் தவத்தின் மிக்கோர் 
   அறிந்துணர் பொருளே போற்றி 
ஊற்று தேன்கொன்றை வேணி 
    ஒருவனே போற்றி போற்றி 


இவ்வாறு இருவரும் கொன்றை வேணியனை உளம்கனிந்து உருகித்துதித்தனர்.


முற்றும் 
சுபம் 
HAVE A NICE DAY 
















   












Artifice 
The Presence of Siva (Mythos: The Princeton/Bollingen Series in World Mythology)
I Love Sivas Embroidered Cap
Meditation Statue Lord Siva Brass Figurine (mst079)
Mystikats - Siva
The Presence of Siva (Mythos: The Princeton/Bollingen Series in World Mythology)  






      











 HAVE A NICE DAY

சனி, 17 ஜூலை, 2010

SIVAPPARAMPORUL-5

HAVE A NICE DAY



LORD SIVA
                                    
                            


     சிவப்பரம்பொருள்- 5
 திருமதி  சாந்தா வரதராஜன் 
 varadshantha@yahoo.com     




மாதவனும் மலரோனும் எம்பெருமானைக் குறித்து பக்தியோடு 
துதித்த தோத்திரம். 


 நினைப்புமாய் மரப்புமாகி 
     நினைவினுக்கு எட்டாதோன்றாய் 
அனைத்துமாய் நின்றாய் போற்றி 
       அருமறைக்கொழுந்தே போற்றி 
கனைத்து வண்டிமிர விள்ளும் 
         கடுக்கையங் கண்ணியோடு  
புணிற்று வெண் தின்கட்கண்ணி 
      புனைந்த செஞ்சடையாய் போற்றி 


நள்ளிருட் பிழம்பு மேயு 
    நாகினந்த் திங்கள் நோக்கிப் 
புள்ளிமான் பிள்ளை துள்ளும் 
    புனைமலர் காத்தாய் போற்றி 
உள்ளோடு புறமாய் எங்கும் 
   உறைந்த அருளிறைவா போற்றி 
வெள்ளியம் பொருப்பில் வாழும் 
    விமலனே போற்றி போற்றி 


பொறுப்பு வில்குழைய வாங்கிப் 
     பிரம்எரி படுத்தாய் போற்றி 
மருக்கமழ் குமுதச் செவ்வாய்  
     மலைமகள் கொழுந்தே போற்றி 
நெருப்பு உருவெடுத்த முன்னர் 
    நெடு விசும்புரிவி நின்ற 
அருட்பெருங் கடலே போற்றி 
    அமலமே போற்றி போற்றி 


தொடரும் 


   








   












                           

சனி, 10 ஜூலை, 2010

SIVAPPARAMPORUL-4

HAVE A NICE DAY



LORD SIVA 
                          


     சிவப்பரம்பொருள்- 4 
 சாந்தா வரதராஜன் 
 varadshantha@yahoo.com     

    ஈசுன் அவர்கள் துதிகளால் மகிழ்ந்து மாதவனைப் பார்த்துச் சொன்னார்,'என்னுடைய வலப் பக்கத்தில் தோன்றியவர் மலரோன்,நீ என் இடப் பக்கத்தில் உதித்தவன். என் மற்ற புதல்வர்களான கணேசனுக்கும், குமாரனுக்கும் ஒப்பானவர்கள் நீங்கள். உங்களுக்கு வேண்டியதை கேளுங்கள் தருகிறேன்'. இவ்வாறு ஈசன் கூறியதும் நான்முகன் அவரைப் பணிந்து எழுந்து, 'பிரபோ', தங்களின் அணுகரகதிற்கு பாத்திரனாகிவிட்ட எனக்கு வேறு என்ன வேண்டும் . தங்களிடம் என்றும் பக்தி குன்றாதிருக்க அருள் செய்வதையே வேண்டுகிறேன்' என்று பிராத்தித்தார்.

 'நான்முகா   உன் விருப்பம் நிறைவேற அணுகரகிதோம். என்னிடம் உனக்குப் பக்தி என்றும் குன்றாதிருக்கும்' என்று ஈசன் அருள் செய்தார். பின்னர் மாதவனைப் பார்த்து, 'பத்ம கர்ப்பத்தில் நான்முகன் உனக்கு புத்திரனாக உந்திக்கமலத்தில் தோன்றுவான். அந்நாளில் சோதிவடிவமாய் என்னை தரிசிப்பீர்கள்' என்று அணுக்ரகித்து மறைந்தார்.அது முதல் ஈசன் லிங்கதிலே இனிது அமர்ந்து அவரை வழிபடும் அன்பர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். 


தொடரும் 



   












   






















         


சனி, 1 மே, 2010

SIVAPPARAMPORUL-3

சிவப்பரம்பொருள்- 3  
 சாந்தா வரதராஜன் 
 varadshantha@yahoo.com        

   
   பிரமன் அன்னமாக மாறி வானிலே பறந்து சென்றார்.மாதவன் பன்றியாக உருவெடுத்து பூமியைப் பிளந்து கொண்டு சென்றார். போகப் போக முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போயிற்று; ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல; ஆயிரம் ஆண்டுகள் இருவரும் தங்கள் முயற்சியைக் கை விடாது மேற்கொண்டு அடியையோ, முடியையோ காணமுடியவில்லை. அவர்கள் மிகவும் களைத்து உடல் சோர்ந்து விட்டனர். இனியும் மேலே செல்ல முடியாது என்று தோன்றியதும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தனர்.

    இதுவரை அவர்களிடம் குடி கொண்டிருந்த ஆணவம் அகன்றுவிட்டது. தாங்களே முதல்வர் என்றும் தங்களுக்கு மிஞ்சியவர் யாருமில்லைஎன்ரும் அவர்கள் கொண்டிருந்த எண்ணம் தவறு என்பதை உணர்ந்தனர். அவர்களுக்கும் மேலான ஒரு பொருள் இருப்பதை அவர்கள் கண் கூடாகக் கண்டனர். இருவரும் கை கூப்பி அனற்பிழம்பாக நிற்கும் அப்பொருளை நமஸ்கரிதனர்.  "அடிமுடி கானாப்பொருளே, தாங்கள் யார் என்பதை எங்களுக்கு உணர்த்த வேண்டும்"என்று பிரார்த்தித்தனர். அப்போது அண்டம் கிடுகிடுக்கப் பேரொலி ஒன்று எழுந்தது. அவ்வொலி அடங்கியபோது ஈசானம், தத்புருஷம்,அகோரம்,வாமதேவம்,சத்யோசாதம் என்ற ஐந்து முகங்களுடன் சடையிலே பிறைச் சந்திரன் தன் கதிர் ஒளி வீச, கையிலே மானும், மழுவும், தாங்கியவாறு ஈசன் அவர்களுக்குத் தரிசனம் கொடுத்தார். அதைக் கண்டதும் இவருடைய மேனியும் புளகாங்கிதம் அடைந்து, நெடுஞ்சாண் கிடையாகத் தரையிலே விழுந்து பரம் பொருளை நமஸ்கரிதனர்.

  அவர்களுடைய மேனி நடுங்கியது. கண்களிலிருந்து நீர்பெருக்கெடுத்து வழிந்தது. நெஞ்சம் பக்தியால் தழுதழுத்தது. கைகள் கூப்பி அவரை வணங்கினர். கானக்கிடைதர்கரிய பரம்பொருளே, கேடின்றி உயர்ந்த பரஞ்சுடரே, கடலில் எழுந்த 'விடம்' உண்டு எம்மைக் காத்த பெருமானே, படைத்தும், அழித்தும், கடைநாளில் எவ்வுலகும் பாழ்பட்டு ஒழியத் துடைத்தும் விளையாடுகின்ற ஈசனே, உம்மைப் போற்றி வணங்குகின்றோம். பிறை சூடிய பெருமானை, அரிய தவம் இயற்றும் அன்பர்களுக்கு அருளும் அருட்கடலே, கங்கையைத் தாங்கிய கருணாகரனே, உம்மை அடி பணிந்து வணங்குகின்றோம். அரியனாய், நான் மறைக் கொழுந்தாய், அமலமாய், அழிவின்றி எரியும் கனலாய், கதிர்ச்சுடராய், உருவாய், அருவாய், சின்மயமாய், உள்ளும் புறமும் உணர்வரிய துரியதீதமாய் நின்ற அருட்பெரும்கடலே, உம்மை சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம் என்று இருவரும் ரோமாஞ்சனம் கொண்டவர்களாய்த் துதித்தனர்.

தொடரும் 

HAVE A NICE DAY

                   




HAVE A NICE DAY


HAVE A NICE DAY

சனி, 17 ஏப்ரல், 2010

SIVAPPARAMPORUL-2

சிவப்பரம்பொருள்- 2   
 சாந்தா வரதராஜன் 
 varadshantha@yahoo.com
  சகல  லோகங்களும் அழிந்து பஞ்ச பூதங்களும் ஒன்றுடன் ஒன்று ஐக்கியப்பட்டு பரம்பொருளைச் சேர்ந்து விடும். அனைத்திற்கும் எட்டாது விளங்கும் அந்தப் பரம் பொருளுக்கு தோற்றமோ, அழிவோ கிடையாது. அனைத்தும் அதனின்று உண்டாகி அதனையே அடைகின்றன. இது ஸ்ரிஷ்டியின் தத்துவம்.


  இனி, மாயனும் அயனும் கண்ட மகாலிங்கம் பற்றி அறிவோம். ப்ரக்ரிதித் தத்துவமே கண்ணைப் பறிக்கும் ஒளியோடு லிங்கமாகியது. திங்கள் சூடி,
விஷம் அருந்திய முக்கனப்பெருமானே அந்த லிங்கமாகி நின்றார். மாதவனுக்கும் பிரமனுக்கும் யார் முதல்வன்? என்ற எண்ணம் தோன்றி இருவருக்கும் வார்த்தைகள் தடித்து சண்டை உண்டாகிவிட்டது. ஒருவரையொருவர் மூர்கதனமாக அடித்துக் கொள்ளத் தொடங்கினர். தாமே முதல்வன் என்பதை நிலைநாட்ட ஒருவர் மற்றவரை அழித்துவிடும் எண்ணத்தோடு தாக்கிக்கொண்டனர். அந்தச் சமயத்தில் அவர்கள் முன்பு ஒரு பிரகாசம் தோன்றியது. திடுக்கிட்ட இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்திவிட்டுப் பார்த்தனர். கண்ணைப் பறிக்கும் பிரகாசதினிடையே அரைப்பிழம்பு ஒன்று நிற்பதைக் கண்டனர். அதன் ஆதியோ, அந்தமோ அவர்களுக்குத் தெரியவில்லை. திடீரென்று தோன்றிய இவ்வுருவம் யாதென விளங்கவில்லை. இதன் தலையோ காலோ தெரிந்தால்தானே அறிய முடியும். எனவே இதன் 'முடியை பிரமனும்', 'அடி' யை மாதவனும் கண்டுவரப் புறப்பட்டனர்.


தொடரும் 
HAVE A NICE DAY
           

சனி, 10 ஏப்ரல், 2010

SIVAPPARAMPORUL-1

   சிவப்பரம்பொருள்-1
 சாந்தா வரதராஜன் 
WEST MAMBALAM
 varadshantha@yahoo.com
  'ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி' எனவும் 'முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்,பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன்' என்று மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் சிவன் புகழை விளக்குகின்றார். அப்படிப்பட்ட சிவப்பரம் பொருளின் ஜோதி வடிவான லிங்கஸ்வரூபத்தின் பெருமையை லிங்கபுராணம் விவரிக்கின்றது.


    'உள்ளம் கசிந்துரிகி என்னிடம் செலுத்தும் அன்பிற்கு நான் அருள்செய்வேன்' என்று உமாதேவியிடம் சிவபெருமான் சொன்னதாக லிங்கபுராணம் கூறுகிறது. சூதமுனிவர் லிங்க வழிபாட்டின் மேன்மையை தவஸ்ரேஷ்டர்களுக்கு விவரித்து கூறியதே லிங்க புராணமாகும்.வியாசபகவான் எழதிய பதினெண் புராணங்களில் பதினொன்றாவதான லிங்க புராணம் இதன் மூலம் ஆகும்.இதை பக்தியுடன் கேட்பவர்கள் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்திருப்பர் என்கிறார் சூத மா முனிவர்.


    ஆதி,அந்தமின்றி,பிறப்பு,இறப்பு இல்லாது பேரொளியாக விளங்கும் ஜோதி வடிவிலிருந்து சகலலோகங்களுக்கும் ஆதாரமான லிங்கம் உண்டாயிற்று.அதனிடமிருந்து தோன்றியவர்களே பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகள்.


  தமக்கென வித்து ஏதுமின்றி அனைதுயிற்கும் தாமே வித்தாகி வளர்ந்து விஸ்வரூபியான அப்பெருமானின் படைப்பே இப்பிரபஞ்சமாகிய மாயை. பஞ்ச பூதங்களும் அவனே.ஈசானம் தத்புருஷம், அகோரம்,வாமதேவம்,சத்யோசாதம் ஆகிய ஐந்தும் அப்பெருமானுடைய முகங்கள்.
தொடரும்