OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

செவ்வாய், 22 மார்ச், 2011

perunai- subbiramania swami thirukkovil-1

HAVE A NICE DAY

 பெருணை
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
கேரளா 



    
               பங்குனி - உத்திரம் 
         saturday, 19th march 2011 
     

                  பெருனை- சுப்பிரமணிய சுவாமி              திருக்கோவில் -1     
      
              திருமதி சாந்தா வரதராஜன்



    நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அடக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் இறைவன் யுகந்தோறும் திருஅவதாரம் செய்கிறான். இராம, கிருஷ்ண அவதாரங்கள் போன்று  முருகப்பெருமானும், சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதாரம் எடுத்து அமரர்களை காத்தார் என்பது புராண வரலாறு.

     பெருணை என்ற திருத்தலம் கேரள மாநிலம் சந்கனாச் சேரியிலிருந்து திருவல்லா செல்லும் பாதையில்  எம்.சி.ரோடில் அமைந்திருக்கிறது. அங்குள்ள புகழ்பெற்ற கோவில் பெருணை சுப்பிரமணிய சுவாமி கோயில். தாரகாசுரனை சம்ஹாரம் செய்த பின் வெற்றி புன்னகையுடன் சுப்பிரமணியர் வந்து நின்ற தலம் இது.இனி புராணகதை, கோயில் அமைப்பு, அதன் சிறப்பு முதலியன நோக்குவோம். 

     சூரபத்மனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் சம்ஹாரம் செய்து, தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து, தர்மத்தை நிலை நாட்டி வெற்றிபெற்று வரும்படி ஈசன், இளைய மகன் முருகனிடம் ஆணையிட்டார். தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்று போருக்கு புறப்பட்டார் முருகப் பெருமான். செல்லும் முன் சிவபெருமான் பதினொரு உத்திரர்களை பதினொரு படைக்கலங்களாக மாற்றி கந்தனிடம் கொடுத்தார்.                                               

தொடரும் 

   
















   

சனி, 5 மார்ச், 2011

KAVITHAI

HAVE A NICE DAY

 HAPPY WOMEN'S DAY !!
  

           WOMEN'S DAY TODAY 
        TUESDAY, MARCH, 8 th, 2011
         100 th woman's day
   ON THIS DAY KOVILMANI SALUTES WOMANHOOD
       
     கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன்


  
   பெட்டகம் 
  அன்பு நிறைந்தவள் தமிழன்னை 
   அருள் அளிப்பவள் தமிழன்னை 
    இன்பக் கலைகள் யாவையுமே 
   ஈன்று  வளர்த்திடும் தமிழன்னை 
         அன்பின் பெட்டகம் அல்லவா?

      மான் சேர மயிலாடக் குயல்பாட மலர்கள் 
     தேன்செர மகரந்தம் திசைதோறும் சிதற 
     மீன் சேரும் சிற்றோடை மெல்லோசை தவழும் 
    பூஞ்சோலையும் இயற்கையன்னை எனும் பெட்டகம்தானே 

     இயலென எழுதியும், இசையென பாடியும் 
     கற்பனை நிறைய கவிதைகள் புனைந்தும் 
     குளங்களை வெட்டியும், கோபுரம் கட்டியும்  
     சிலைகளைச் செதுக்கி, சித்திரம் வரைந்தும் 
     மலைகளைக் குடைந்தும், மண்டபம் ஆக்கியும் 
     நுண்கலைகளை வளர்த்த நம் பாரத நாடு கலாசார  பண்பாட்டின் பெட்டகம் தானே! 

     குண்டலமும் மேகலையும் சிலம்பும் முபபார் 
     குறள் மறையும் ஐந்திணையும் பதிற்றும் பத்தும்  தண்டியும் தொல் காப்பியமும் நளவெண்பாவும்
      தளைவளையா பதி, சிந்தாமணி, கலிங்கம் 
     கொண்டவனின் பரணியோடு கலம்பகங்கள்,
     கோவேந்தர் உலாக்கள், மடல் பிரபந்தங்கள் 
     எண்டிசையும் புகழ்மணக்கும் பத்துப்பாட்டும் 
           தமிழ் இலக்கியத்தின் பெட்டகம் அல்லவா?

                      ------------------------------