OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 28 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-5

HAVE A NICE DAY


 sivapoojai 
  


சிவலிங்க தத்துவம் - 4
  திருமதி சாந்தா வரதராஜன்


    கிரஹஸ்தாஸ்ரமத்தில் இருப்பவனுக்கு ப்ரதிமா பூஜையே விதிக்கப்பட்டிருக்கிறது. நீராடி புத்தாடை உடுத்தி நிர்மலமான மனதோடு பூஜைக்கு உட்கார வேண்டும். வெறும் தரையில் அமரக்கூடாது. மரத்தால் செய்யப்ப்பட்ட பலகையில் பட்டு வஸ்திரம் விரித்து அமரவேண்டும். மான்தோல் மிகவும் விசேஷமானது. நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வது  மிகவும் அவசியமானது. கங்கையைதுதித்து மந்திர பூர்வமாக மூன்று தரம் ஆசமனம் செய்து பூஜையைத் தொடங்க வேண்டும். முறைப்படி சிவபெருமானை மந்திரங்களைச் சொல்லி லிங்கத்தில் ஆவாகனம் செய்து அர்க்கியம் முதலியன விட்டு, அத்தர்,பன்னீர், சந்தனம், முதலிய பரிமள த்ரவ்யன்களால் அபிஷேகிக்கவேண்டும்.பிறகு நீரால் அபிஷேகம் செய்து திலகம் இட்டு மலர்களை சமர்பிக்கவேண்டும். முக்கியமாக தாமரை, கொன்றை,அத்தி,மல்லிகை,ரோஜா, 
வில்வம், தர்பை,அறுகு,கருவூமத்தை,துளசி ஆகியவற்றால் மகேஸ்வரனை அர்ச்சிக்கவேண்டும்.தூபம் தீபம்,நைவேத்யம்,கற்பூர ஆரத்தி செய்து, பிரார்த்தனை முடிந்த பிறகு,பஞ்சாட்சரம் செய்து சிவச்தித்ரங்களைச் சொல்லி புஷ்பாஞ்சலி செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்.


தொடரும் 


   














   













சனி, 21 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-4

HAVE A NICE DAY


         சிவலிங்கம் 
        

சிவலிங்க தத்துவம் - 3
  திருமதி சாந்தா வரதராஜன்


       எத்தனையோ பிறவிகளில் மானிடப்பிறவி என்பது அரிது.மானிடனாகப் பிறந்தவன் அவனவன் குலதிற்கேற்ப விதிக்கப்பட்ட கர்மாக்களை தவறாமல் கடைபிடிதுவரவேண்டும். ஆயிரம் கர்மாக்களைச்செய்வதைவிட தீர்த்த யாத்திரை விசேஷமாகச் சொல்லப்பட்டது. தவம் மேற்கொள்வது அதனினும் மேற்பட்டது.இன்னும் மேலானது தியானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. த்யானத்தின் மூலம் ஒருவன் பரப்ரம்மத்தை தான் இதயத்திலே தரிசிக்கிறான். அவன் பரப்ப்ரம்மஸ்வரூபமாகவே ஆகி விடுகிறான்.


   பரமானந்தத்தை உண்டு பண்ணுவதும், பரிசுத்தமானதும்,            அழிவு இல்லாததும்,நிஷ்களங்கமானதும்,சர்வபரிபூரனமாதுமான சிவலிங்கத்தை அவன் தன் மனதிலேயே காண்கிறான். சிவலிங்கம் இருவகைப்படும். ஸ்தூலமான கண்ணுக்கு புலப்படக்கூடியது 'பாஹ்யலிங்கம்' என்றும், ஞானக்கண்ணுக்கு புலப்படக்கூடியது 'அந்தரலிங்கம்' என்றும் கூருவர்.மேலும் ஞானிகளுக்கு 'விக்ரக' ஆராதனை தேவையில்லை.ஞானம் இல்லாதவனுக்கு விக்கிரக ஆராதனை அவசியமாகும். பக்தியோடு பூஜித்தால் தான் ஒருவன் தான் கோரிய பலனை அடைவான்.இல்லையேல் அவன் செய்யும் வழிபாடு வ்யர்த்தமாகும்.மேலும் , ஸ்ரத்தையின்றி பூஜை செய்வதால் அவன் கீழான நிலையையே அடைவான்.


தொடரும் 


   








   












                



சனி, 14 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-3

HAVE A NICE டே


       
 சிவலிங்கம் 





சிவலிங்க தத்துவம் - 3
  திருமதி சாந்தா வரதராஜன்



     அவ்வகையில் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அளிக்கப்பட்ட லிங்கங்கள் : இந்திரன் - பத்ம ராகத்தால் செய்யப்ப்பட்ட லிங்கம்; குபேரன் - ச்வர்ணலிங்கம்; யமன் - கோமேதக லிங்கம்; வருணன் - நீல லிங்கம்; விஷ்ணு   - இந்திர நீலத்தால் செய்யப்ப்பட்ட அழகிய லிங்கம்; பிரம்மன் - ச்வர்ணத்தால் செய்யப்ப்பட்ட லிங்கம்; அஷ்டவசுக்களும், விஸ்வதேவர்களும் - வெள்ளியாலான லிங்கம்; வாயு - பித்தளை லிங்கம்; அஸ்வினி தேவர்கள் - பார்த்திவ லிங்கம்; லஷ்மி - ஸ்படிக லிங்கம்; சோமராஜன் - முத்து லிங்கமும் வஜ்ஜிர லிங்கமும்; பிராம்மணர்கள் - பார்த்திவ லிங்கம்; (மண்ணால் செய்யப்பட்டது ); மயன் - சந்தன லிங்கம்; அனந்தன் முதலிய நாகராஜாக்கள் - பவள      லிங்கம்; தைத்தியர்கள்,அரக்கர்கள் - கோமய லிங்கம் (சாணத்தால் செய்யப்பட்டது ); பிசாசங்கள் - இரும்பு லிங்கம்; பார்வதி தேவி - நவநீத லிங்கம்; நிருதி - தாரு லிங்கம் (மரத்தால் செய்யப்பட்டது ); சாயாதேவி - மாவினால் செய்யப்ப்பட்ட லிங்கம்; யோகிகள் பஸ்ம லிங்கம்;சரஸ்வதி தேவி - இரத்தின லிங்கம்; யட்சர்கள் - தயிரினால் செய்யப்ப்பட்ட லிங்கம்; இந்தவிதமாக, விஸ்வகர்மாவிடமிருந்து பெற்றுக்கொண்ட லிங்கங்களை அனைவரும் பயபக்தியோடு வணங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். "ஹர ஹர சம்போ சங்கரா " என்ற கோஷம் எட்டுத் திசைகளிலும் மோதி எதிரொலித்தது. விஷ்ணு தம்மை மறந்து ஈசனை திணித்தார். மகிழ்ச்சிக்கிடையில் எவரும் வழிதவறி சிவாபராதிகள் ஆகிவிடக் கூடாதென்று அவர்களுக்கு சிவ பூஜை பற்றி உபதேசிக்க முன்வந்தார் பிரம்மன்.


தொடரும் 
   










   
















                      

சனி, 7 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-2

HAVE A NICE DAY

     சிவலிங்கம் 
சிவலிங்க தத்துவம் - 1 
  திருமதி சாந்தா வரதராஜன் 
  

        இத்தகைய ஈசனின் மகிமைகளை அறிந்த தேவர்கள், அவர் அருள்கடாக்ஷம் தங்களுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். தங்கள் விருப்பங்களை விஷ்ணுவிடம் கூறி, தங்களுக்கு சிவலிங்கங்கள் கிடைக்கச் செய்யுமாறு விஷ்ணுவை பிரார்த்தித்தனர். உடனே, விஷ்ணு தேவதச்சனை அழைத்து, "தேவதச்ச, சகல காரண பூதரான சிவபெருமானின் திருஅருட்ப்ரசாதம் என்றும் கிடைக்கும்படி அவரைத் தினமும் ஆராதித்து வர தேவர்களாகிய நாங்கள் விரும்புகிறோம். ஆகவே சிவலிங்கங்கள் செய்து அளிக்க வேண்டும்" என்றார். விசுவகர்மாவும் அவ்வாறே ஒவ்வொரு தேவர்க்கும் அவரவர் அந்தஸ்துக்கேற்ப 'சிவலிங்கங்கள்'செய்து அளித்தான்.       


தொடரும் 


   












   












   Yoga:the Sivananda Yoga Video [VHS]