OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

திங்கள், 27 டிசம்பர், 2010

DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-2

HAVE A NICE DAY

     DHANVANTHIRI BAGAVAAN    


DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-2


திருமதி சாந்தா வரதராஜன்

  பின்னர் 'மகாவிஷ்ணு', 'மோகினி' அவதாரம் எடுத்து அமுதத்தினை தேவர்களுக்கு அளித்தார் என்பது புராண வரலாறு. விண்ணுலகினர் நலனுக்காக அமுதினைத் தந்த தன்வந்திரி பகவான் , மண்ணுலகினர் {நலனுக்காக] ஆரோக்கியத்திற்காக 'ஆயுர்வேதம்' அருளினார்.தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம் என்று புராணங்கள் கூறுகின்றன. மண்ணுலக மக்களைக் காக்க மனம் கொண்டார். எனவே காசிராஜனின் மகனாகப் பிறந்தார். பல சித்தர்களிடம் கிரந்தங்களைக் கேட்டறிந்தார். அதன் பின் ஆயுளைக் காப்பதும், வேதத்திற்கு நிகரானதுமான மருத்துவ முறைகளை நூலாக எழுதினார். அதுவே ஆயுள் [ஆயுர்] வேதமாகும்.


     வேலூர் மாவட்டம், சென்னை - பெங்களூர்  சாலையில் வாலாஜாபேட்டை, கீழ் புதுப்பேட்டையில்,'' ஸ்ரீ தன்வந்திரி பகவான்'' ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. இராஜஸ்தான், கேரளா போன்ற பல இடங்களிலும் , தமிழகத்தில் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், சென்னை, சேலம், ஆகிய பல இடங்களிலும் பிரகார சந்நிதிகளில் தன்வந்திரிக்கு இடம் உண்டு. ஆனால் இவருக்கு எனத் தனிக்கோயில் உலகத்திலேயே  இங்கு மட்டும்தான் உள்ளது.


      இனம்,மொழி,ஜாதி,மதம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து இந்த ஆலயம் அமைவதற்குப் பாடுபட்டு உள்ளனர்.


     இந்த ஆலயத்தில் கர்ப க்ருகதின்கீழ் 15  அடி ஆழத்தில் ஏழு அங்குலம் விட்டத்தில் செப்புக் குழாயின் நடுவின் ஏறத்தாழ 48 இலட்சம் பக்தர்களால் கைப்பட எழுதிய 54  கோடி மந்திரங்கள் 13  மொழிகளில் எழுதப்பெறப்பட்டு இந்தக் கர்ப கிருகத்தின் கீழ் வியக்கத்தக்க அளவில் யந்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஓர் உலகச் சாதனையாகும். பக்தர்கள் கைப்பட எழுதிய இம்மகா மந்திரங்களுக் கஜபூஜை, கோபூஜை 1008  சுமங்கலி பூசை செய்து அமைக்கப்பட்டுள்ளது.


தொடரும் 


    










The fundamentals of Yoga Vyaayaama: Presidential address
The future of Ayurveda
Thrigunaas in health and disease






        

செவ்வாய், 14 டிசம்பர், 2010

DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL

HAVE A NICE DAY

       
தன்வந்திரி பகவான்
       

        திருமதி சாந்தா வரதராஜன் 

                உலக உயிர்கள் யாவும் இன்புற்று வாழவும், மாந்தர்கள் தம் உடல் நோயும், அதனால் வரும் உள்ளபிணியும் நீங்குவதற்கும் கருணைக்கடல் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் அருள் வேண்டும்."Health is Wealth"  என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப உடல் நலத்தோடு இருந்தால்தான் மற்ற எல்லாம் தானே வந்து சேரும் என்பர்.எந்த உடல் நலக்குறைவும் வராமல் இருக்கவும், அப்படி வந்தால் மிக விரைவாகக் குணமாகவும், ஆரோக்கியம் நிலைக்கவும், மக்களுக்கு "தன்வந்திரி" பகவானின் ஆசி பூரணமாக கிட்டுவதற்கு கீழ்காணும் மந்திரங்களைப்  பக்தியுடன் கூறினால் நன்மை உண்டாகும்.


       "ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்தரையே அமிர்த கலச ஹஸ்தாய,
          சர்வாமய வினாசனாய, த்ரைலோக்ய நாதாய ,ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா"      


   இதன் பொருளாவது "மகா விஷ்ணுவின் மறு அவதாரமான ஸ்ரீ தன்வந்திரி பகவானே! அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி எல்லா உயிர்களின் நோய்களைக் குணப்படுத்தும், மூன்று உலகங்களுக்கும் தலைவனே! வணங்குகிறோம் உன்னை! நலம் தருவீர் உடனே!"


   ஸ்ரீ தன்வந்திரி பகவான் எவ்விதம் உதயமானார் என்பதை முதலில் அறிவோம். ஆயுளும் ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக, அமரர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அமுத கலசத்தினைக் கரங்களில் ஏந்தி வெளிப்பட்டார் தன்வந்திரி பகவான். வெண் பட்டாடை ஒளி வீச,அமுதக் குடத்துடன் தோன்றிய அவரைக் கண்டதும் சுரர்களும், அசுரர்களும் ஆனந்தம் அடைந்தனர்.


 தொடரும் 


  

புதன், 1 டிசம்பர், 2010

MANAKKULA VINAYAGAR-2

HAVE A NICE DAY


        மணக்குள விநாயகர்     
    அருள்மிகு மணக்குள விநாயகர் 
              புதுச்சேரி 
   திருமதி சாந்தா வரதராஜன் 

   
    
       விநாயகப் பெருமான் ஐந்தொழிலையும் ஆற்ற வல்லவர். எழுத்தாணி பிடித்த  கை படைப்பையும்,மோதகம் ஏந்திய கை காத்தலையும்,அங்குசம் கொண்ட கை மறைத்தலையும், அமுதகலசம் ஏந்தி துதிக்கை அருள்வதையும் விளக்குகிறது.


   இனி,அருள்மிகு மணக்குள விநாயகர் புராணம் வரலாறு,திருக்கோயில் தொன்மை,சிறப்பு,திருக்கோயில் அமைப்பு,வழிபாடு விழாக்கள் ஆகியவற்றை சற்று நோக்குவோம்.புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் தங்களுக்காக ஒரு கோட்டையை கட்டிக்கொண்டனர்.அக்கொட்டைக்குப் பின்புறம் அமைந்திருந்த திருக்கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயிலாகும். இக்கோயில் இருக்கும் இடத்திற்குச் சமீபத்தில் மேலண்டைப் பகுதியில் ஒருகுளம் இருந்ததாகவும்,அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில்  மணல் அதிகமாக இருந்ததாகவும், அதன் காரணமாக அக்குளத்திற்கு "மணற்குளம்" என்று   பெயர் வந்ததாகவும் சான்றுகளுடன் கூருவர்.இந்த மனக்குளத்தின் கீழ்கரையில்தான் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இதனால் இந்த ஆலயத்திற்கு 'மணற்குள விநாயகர் ஆலயம்' என்று பெயர் ஏற்பட்டது.


  தற்சமயம் இந்த ஆலயத்தின் அருகில் குளம் ஏதும் இல்லை. காலப்போக்கில் மறைந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமாள் மனர்குளதுப் பிள்ளையார் என்றும், மனர்குலத் தாங்கரைப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுவதால், இங்கு 'மணற்குள விநாயகர்' என்பதே இவ்வினாயகப் பெருமான் பெயர் என்பது சந்தேகமின்றி விளங்குகின்றது.இன்றைக்கும் கருவறையின் கண்உள்ள விநாயகப் பெருமான் படிமத்துக் கருகில் நீர் சுரந்து வரும் இயல்பைக் காணலாம்.புவனேச விநாயகர் என்ற பெயர் பிற்காலத்தில் பெயர் மருவி 'மணக்குள விநாயகர்' என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.


தொடரும் 


  

                       

   














    





















சனி, 9 அக்டோபர், 2010

MANAKKULA VINAYAGAR-1

HAVE A NICE DAY

                மணக்குள விநாயகர் 
     
     அருள்மிகு மணக்குள விநாயகர் 
              புதுச்சேரி 
   திருமதி சாந்தா வரதராஜன் 

   பொதுவாகத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையில் 
 கோயில்களோடு கொண்டுள்ள தொடர்புகளால், தங்கள் சமய வாழக்கை, கலாசாரம், பண்பாடு மற்றும் பக்திநெறிகள் தனித்தன்மையான வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றை உலகுக்கு எட்டுதுக்காட்டுகின்றனர். கோயில்களுக்குப் புராண மெருகேற்றி இறைதன்மை மிளிரவிட்ட பெருமை தலபுராணங்களை சாரும். வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், தாழ்ந்த சென்னியும் அளித்த இறைவனை நமது (பணிகள்) கடமைகளைச் செய்யத் தொடங்கினால் அவர் செவ்வனே அப்பணியை முடித்து வைப்பார். 
    "பிள்ளையாரைத் தொழுது நாம் 
 பெருஞ் செயல்கள் தொடங்கினால் 
 உள்ளாரச் செய லெல்லாம் 
 உயர்வாய் முடியும்" 
என்பது பக்தர்களின் நம்பிக்கை. புவனேச விநாயக பெருமாள், புண்ணிய பூமியாம் புதுச்சேரியில் கடற்கரை அருகில் மணக்குள விநாயகர்" என்னும் திருப்பெயர்கொண்டு எழுந்தருளியிருக்கிறார். புதுச்சேரி என்ற பெயரைக் கேட்டவுடனே மக்களுக்கு நினைவிற்கு வருவது 'மணக்குள விநாயகர்' திருக்கோயில் அமைந்துள்ள திருத்தலம். எல்லாம் வல்ல பரம்பொருளை வழிபடும் மார்கங்களை 'ஆறு சமயங்கள்' என்பர். "ஷண்மதங்கள்" என வட மொழியில் கூறப்படுகிறது. முதல் கடவுளாக விநாயகப் பெருமானை வழிபடுவது  "காணபத்யம்" எனப்படும். கணபதியை வழிபடும் மதம் "காணபத்யம்".


தொடரும் 
   








   










                   

சனி, 2 அக்டோபர், 2010

SIVALINGA THATHUVAM-10

HAVE A NICE DAY

 சிவ பூஜை 

     

 சிவலிங்க தத்துவம் - 10

  திருமதி சாந்தா வரதராஜன்    



           "மனதால் நினைத்தாலே பாவங்கள் விலகக் கூடிய" பஞ்ச பூத லிங்கங்கள் ஐந்து ஆகும்.


  காஞ்சீபுரத்தில் பிருதுவி மயமான ஏகாம்பர  லிங்கம் இருக்கின்றது. காவேரி தீரத்தில் உள்ள ஜம்புகேசுவரத்தில் அப்புமயமான ஜம்புகேஸ்வர லிங்கம் உள்ளது. அக்கினி மயமான அருணாச்சல லிங்கம், அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையில்  இருக்கிறது. சுவர்ணமுகி  தீரத்தில் உள்ள திருக்காளத்தியில் வாயு மயமான திருமூல லிங்கம். பூலோக மகா கைலாசம் எனப்பெற்ற தில்லைவனமானது சிதம்பரத்தில் உள்ளது. இவ்வைந்து லிங்கங்களின் பெயரைக் கேட்டாலும், சொன்னாலும் மனதில் நினைத்தாலும் அப்போதே அவன் புனிதமடைகிறான் என்று சொல்லப்படுகிறது. எனவே கண்ணாரக் கண்டால் பயனை விவரிக்க வேண்டுமா? 


  மேலும், ஜோதிர்லிங்கம் பன்னிரண்டுக்கும்  உபலின்கங்கள் உள்ளன. அவற்றைக் காண்போம். சோமநாத லிங்கத்திற்கு உபலிங்கம், மஹீநதி சமுத்திர சங்கம தீரத்திலுள்ள அந்த கேசலிங்கம் ஆகும். பிருகு பர்வததுக்குச் சமீபத்திலுள்ள ருத்திர லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கத்தின் உபலிங்கம். அதேபோல மகாகாள லிங்கதிற்குத் துக்தேச லிங்கமும், ஒன்காரச்வர லிங்கதிற்குத் கர்தமேச லிங்கமும் உபலிங்கங்கலாகச் சொல்லப்பட்டுள்ளன. யமுனை தீரத்தில் உள்ள பூதேச லிங்கம் கேதார லிங்கத்திற்கு உபலிங்க மாகும். பீமசங்கர லிங்கத்திற்கு பீமேச்வர லிங்கமும், விஸ்வேஸ்வர லிங்கதிற்குச் சரச்யேச்வர லிங்கமும், திரியம்பக லிங்கதிற்குச் சிதேச்வர லிங்கமும், வைத்திய நாதலிங்கதிற்கு வைச நாத லிங்கமும் நாகேஸ்வர லிங்கத்திற்கு ஜில்லிகா சரஸ்வதி சங்கமதிலிருக்கும் பூதேஸ்வர லிங்கமும், இராமேஸ்வரா லிங்கத்திற்குக் குப்தேச்வர லிங்கமும், குஸ்மேச லிங்கத்திற்கு வியாக்ரேச்வர லிங்கமும் உபலிங்ககலாகும்.


தொடரும் 
   








   
                     















சனி, 25 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-9

HAVE A NICE DAY

    சிவ பூஜை 
    



சிவலிங்க தத்துவம் - 9
  திருமதி சாந்தா வரதராஜன்    

 ருத்ராட்சங்களில் ஒருமுக மணி கிடைப்பது அரிது என சொல்லப்படுகிறது. அப்படி அது கிடைக்கும் பட்சத்தில், அது இலந்தம் பழம் அளவு இருக்குமானால் சுகம் அதிகமாகும். நெல்லிக்காய் அளவு இருந்தால் துக்கங்கள் நீங்கும். கடலை  அளவு உள்ளது மிகவும் விசேஷமானது. இம்மையிலும், மறுமையிலும் சகல  நன்மைகளையும் கொடுக்க வல்லது. குன்று மணி அளவு உள்ளது காரிய சாதகம் செய்யும். ருத்ராட்சங்களை அணிய விரும்புபவன் அவற்றை பொருள் கொடுத்தே பெறவேண்டும்.தானமாக பிறரிடமிருந்து வாங்கக் கூடாது. பணம் கொடுத்து வாங்க இயலாதவன் தன் புண்ணியத்தை தத்தம் செய்தாவது பெற வேண்டும். ருத்ராட்சமாலை அணிந்தவனைப் பார்த்தால் பூதப்ரேத பிசாசங்கள் ஓடிவிடும்.    
 அடுத்து, ஜோதிர் லிங்கங்களை பற்றி சூதர் கூறிய விளக்கங்களைக்கான்போம். ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டு வகைப்படும். சௌராஷ்ட்ரத்தில் சோமநாத லிங்கம் இருக்கிறது. ஸ்ரிசைலதிலுள்ள லிங்கத்திற்கு மல்லிகார்ஜுன லிங்கம்  என்று பெயர். உஜ்ஜைனியில் மகாகால லிங்கமும், ஓங்கார லிங்கமும் உள்ளன. ஹிகோதிரியில் கேதாரலிங்கமும், டாகினியில் பீமசங்கரளிங்கமும், காசியில் விச்வேஸ்வரலிங்கமும் கோதாவரி தீர்த்தத்தில் த்ரியம்பக லிங்கமும், சிதாபுரத்தில் வைதியனாதலிங்கமும் இருக்கின்றன. நாகேஸ்வர லிங்கம் தாருகா வானத்திலும், இராமேஸ்வர லிங்கம் சேதுவிலும், குச்மேசலிங்கம் சிவாலயத்திலும் உள்ளன. ஜோதி லிங்கங்கள்    பன்னிரண்டின் பெயரையும் எவனொருவன் விடியற்காலத்தில் எழுந்திருந்து பயபக்தியோடு ஜபிக்கிறானோ அவன் பாவங்களிலிருந்து விடுபட்டு காரிய சித்தியை அடைவான். இவற்றைப் பூசிப்பவர்கள் பிறவி ஒழிந்து பகவானின் சந்நிதானத்தை அடைவார்கள்.

தொடரும் 
      
   




   








 அடுத்து,

சனி, 18 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-8

HAVE A NICE டே



                                               சிவ பூஜை 


சிவலிங்க தத்துவம் - 8
  திருமதி சாந்தா வரதராஜன்    


  ஆயிரத்தொரு நூறு ருதிராட்சங்களை ஒருவன் தரிப்பானகில் அவன் ருதிரஸ்வரூபியாக விளங்குவான். ஐந்நூற்றைம்பது ருதிராட்சங்களால் கிரீடம் செய்து அணிபவன் சிவசாநிதியத்தை அடைவான். உபவீதமாகத் தரிப்பதினால் அறுபது ருதிராட்சங்களை அணிய வேண்டும். முக்திக்கு ஒருவன் சிகையில் மூன்றும், இருகாதுகளிலும் ஐந்து அல்லது ஆரும்,கழுத்தில் நூற்றௌன்ரும், புஜத்தில் பதினொன்றும், இருகாதுகளில் சுற்றிலும் பதினொன்றும், மணிக்கட்டில் பதினொன்றும் பூணூலில் மூன்றும் அணியவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. ருத்ராட்சமனிகளைக் கொண்டு ஒருவன் நூறு முறை சிவநாமங்களை ஜபிப்பானாகில், ஆயிரம் முறை ஜபித்த பலனை அடைவான்.


    ருத்ராட்சங்களிலும் பலவகை உள்ளன. ஒரு முகம் உடையது சகல காரிய சித்தியை அளிக்கும். இருமுகம் கொண்டது லஷ்மிகடாட்சதை அளிக்க வல்லது. மூன்று முகம் கொண்டது நினைத்த காரியத்தை விருத்தி செய்யும். நான்கு முகங்களை  உடையது சதுர்வித புருஷார்த்தங்களையும் கொடுக்கவல்லது. ஐந்து முகங்களோடு கூடியது சகல பாவங்களையும் போக்கிவிடும்.


தொடரும் 


       












    












      

சனி, 11 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-7

HAVE A NICE DAY
      
                                                        சிவபூஜை 

சிவலிங்க தத்துவம் - 7
  திருமதி சாந்தா வரதராஜன்
  
   நைமிசாரண்ய வாசிகளான முனிவர்களுக்கு சூதமுனிவர் சிவமகாத் மியத்தை எடுத்துரைத்தார் என்றும் ஜோதிர் லிங்கங்களைப் பற்றியும் கூறினார் என்றும் சிவபுராணம் குறிப்பிடுகிறது. ருதிராட்சம் தரிப்பதின் பலன்களும் கூறப்பட்டுள்ளது. இவற்றை சுருக்கமாக நோக்குவோம். 


     சிவபெருமானின் திவ்விய சரிதங்களை ஒருவன் கேட்பானாகில் அவன் சகல பாவங்களும் நீங்கிப் பரிசுதனாகுவான்.அவன் மூலம் அவன் வம்சமே விளங்கும். நெற்றியில் விபூதியும், கழுத்தில் ருதிராட்சமும் தரித்து சதா சிவநாமங்களை உச்சரிப்பவனை ஒருவன் தரிசிப்பானாகில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன்கிட்டும். அவனிடத்தில் சிவநாமமே கங்கையாகவும், விபூதியே யமுனையாகவும்,ருதிராட்சமே சரஸ்வதியாகவும் விளங்குவதாகச் சொல்லப்படுகிறது.


தொடரும் 
   










               
   

சனி, 4 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-6

HAVE A NICE டே


    
                                                சிவபூஜை 


சிவலிங்க தத்துவம் - 5
  திருமதி சாந்தா வரதராஜன்

            சிவபெருமானை குறப்பிட்ட மலர்களால் அர்ச்சித்தால் அதற்கேற்ப பலன்கள் கிடைக்கும். தாமரை மலர்,வில்வம் சதபத்ரம் இவைகளால் அர்சிப்பவன் பெரும் தனத்தை அடைவான்.பரிசுத்தமான பத்துக்கோடி மலர்களால் சிவனை பூஜிப்பவன் ராஜபோகத்தை அடைவான். கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்கப் பன்நீராயிறது ஐந்நூறு மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். சத்துரு பயம் நீங்கப் பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.கோடி மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் ஞானம் உண்டாகும். ஐந்து கோடி மலர்களால் அற்சிப்பவனுக்கு முக்தி கிடைக்கும். அரைக்கோடி மலர்களால் அர்ச்சித்து ம்ரிதுனஜய மந்திரத்தை மந்திரத்தை ஐந்துலட்சம் உருஜபித்தால் சிவபெருமான் பிரத்யட்சமாவார். லட்சம் அருகம்புல்லால் அர்ச்சனை செய்பவனுக்கு தீர்காயுசு ஏற்படும். கருவூமத்தையால் அர்ச்சித்தால் புத்திரப் ப்ராப்தி உண்டாகும். லட்சம் கரவீர புஷ்பங்களால் அர்ச்சிப்பவனுக்கு சர்வ ரோகங்களும் நீங்கிவிடும். மல்லிகை அழகிய மனைவியையும், மலைமல்லி தானிய சம்பத்தும் கொடுக்கும். சண்பகம், தாழை ஆகிய இரு மலர்களும் சிவபூஜைக்கு உகந்ததல்ல. 


தொடரும் 
    








   








   








             

சனி, 28 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-5

HAVE A NICE DAY


 sivapoojai 
  


சிவலிங்க தத்துவம் - 4
  திருமதி சாந்தா வரதராஜன்


    கிரஹஸ்தாஸ்ரமத்தில் இருப்பவனுக்கு ப்ரதிமா பூஜையே விதிக்கப்பட்டிருக்கிறது. நீராடி புத்தாடை உடுத்தி நிர்மலமான மனதோடு பூஜைக்கு உட்கார வேண்டும். வெறும் தரையில் அமரக்கூடாது. மரத்தால் செய்யப்ப்பட்ட பலகையில் பட்டு வஸ்திரம் விரித்து அமரவேண்டும். மான்தோல் மிகவும் விசேஷமானது. நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வது  மிகவும் அவசியமானது. கங்கையைதுதித்து மந்திர பூர்வமாக மூன்று தரம் ஆசமனம் செய்து பூஜையைத் தொடங்க வேண்டும். முறைப்படி சிவபெருமானை மந்திரங்களைச் சொல்லி லிங்கத்தில் ஆவாகனம் செய்து அர்க்கியம் முதலியன விட்டு, அத்தர்,பன்னீர், சந்தனம், முதலிய பரிமள த்ரவ்யன்களால் அபிஷேகிக்கவேண்டும்.பிறகு நீரால் அபிஷேகம் செய்து திலகம் இட்டு மலர்களை சமர்பிக்கவேண்டும். முக்கியமாக தாமரை, கொன்றை,அத்தி,மல்லிகை,ரோஜா, 
வில்வம், தர்பை,அறுகு,கருவூமத்தை,துளசி ஆகியவற்றால் மகேஸ்வரனை அர்ச்சிக்கவேண்டும்.தூபம் தீபம்,நைவேத்யம்,கற்பூர ஆரத்தி செய்து, பிரார்த்தனை முடிந்த பிறகு,பஞ்சாட்சரம் செய்து சிவச்தித்ரங்களைச் சொல்லி புஷ்பாஞ்சலி செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்.


தொடரும் 


   














   













சனி, 21 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-4

HAVE A NICE DAY


         சிவலிங்கம் 
        

சிவலிங்க தத்துவம் - 3
  திருமதி சாந்தா வரதராஜன்


       எத்தனையோ பிறவிகளில் மானிடப்பிறவி என்பது அரிது.மானிடனாகப் பிறந்தவன் அவனவன் குலதிற்கேற்ப விதிக்கப்பட்ட கர்மாக்களை தவறாமல் கடைபிடிதுவரவேண்டும். ஆயிரம் கர்மாக்களைச்செய்வதைவிட தீர்த்த யாத்திரை விசேஷமாகச் சொல்லப்பட்டது. தவம் மேற்கொள்வது அதனினும் மேற்பட்டது.இன்னும் மேலானது தியானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. த்யானத்தின் மூலம் ஒருவன் பரப்ரம்மத்தை தான் இதயத்திலே தரிசிக்கிறான். அவன் பரப்ப்ரம்மஸ்வரூபமாகவே ஆகி விடுகிறான்.


   பரமானந்தத்தை உண்டு பண்ணுவதும், பரிசுத்தமானதும்,            அழிவு இல்லாததும்,நிஷ்களங்கமானதும்,சர்வபரிபூரனமாதுமான சிவலிங்கத்தை அவன் தன் மனதிலேயே காண்கிறான். சிவலிங்கம் இருவகைப்படும். ஸ்தூலமான கண்ணுக்கு புலப்படக்கூடியது 'பாஹ்யலிங்கம்' என்றும், ஞானக்கண்ணுக்கு புலப்படக்கூடியது 'அந்தரலிங்கம்' என்றும் கூருவர்.மேலும் ஞானிகளுக்கு 'விக்ரக' ஆராதனை தேவையில்லை.ஞானம் இல்லாதவனுக்கு விக்கிரக ஆராதனை அவசியமாகும். பக்தியோடு பூஜித்தால் தான் ஒருவன் தான் கோரிய பலனை அடைவான்.இல்லையேல் அவன் செய்யும் வழிபாடு வ்யர்த்தமாகும்.மேலும் , ஸ்ரத்தையின்றி பூஜை செய்வதால் அவன் கீழான நிலையையே அடைவான்.


தொடரும்