OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 25 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-9

HAVE A NICE DAY

    சிவ பூஜை 
    



சிவலிங்க தத்துவம் - 9
  திருமதி சாந்தா வரதராஜன்    

 ருத்ராட்சங்களில் ஒருமுக மணி கிடைப்பது அரிது என சொல்லப்படுகிறது. அப்படி அது கிடைக்கும் பட்சத்தில், அது இலந்தம் பழம் அளவு இருக்குமானால் சுகம் அதிகமாகும். நெல்லிக்காய் அளவு இருந்தால் துக்கங்கள் நீங்கும். கடலை  அளவு உள்ளது மிகவும் விசேஷமானது. இம்மையிலும், மறுமையிலும் சகல  நன்மைகளையும் கொடுக்க வல்லது. குன்று மணி அளவு உள்ளது காரிய சாதகம் செய்யும். ருத்ராட்சங்களை அணிய விரும்புபவன் அவற்றை பொருள் கொடுத்தே பெறவேண்டும்.தானமாக பிறரிடமிருந்து வாங்கக் கூடாது. பணம் கொடுத்து வாங்க இயலாதவன் தன் புண்ணியத்தை தத்தம் செய்தாவது பெற வேண்டும். ருத்ராட்சமாலை அணிந்தவனைப் பார்த்தால் பூதப்ரேத பிசாசங்கள் ஓடிவிடும்.    
 அடுத்து, ஜோதிர் லிங்கங்களை பற்றி சூதர் கூறிய விளக்கங்களைக்கான்போம். ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டு வகைப்படும். சௌராஷ்ட்ரத்தில் சோமநாத லிங்கம் இருக்கிறது. ஸ்ரிசைலதிலுள்ள லிங்கத்திற்கு மல்லிகார்ஜுன லிங்கம்  என்று பெயர். உஜ்ஜைனியில் மகாகால லிங்கமும், ஓங்கார லிங்கமும் உள்ளன. ஹிகோதிரியில் கேதாரலிங்கமும், டாகினியில் பீமசங்கரளிங்கமும், காசியில் விச்வேஸ்வரலிங்கமும் கோதாவரி தீர்த்தத்தில் த்ரியம்பக லிங்கமும், சிதாபுரத்தில் வைதியனாதலிங்கமும் இருக்கின்றன. நாகேஸ்வர லிங்கம் தாருகா வானத்திலும், இராமேஸ்வர லிங்கம் சேதுவிலும், குச்மேசலிங்கம் சிவாலயத்திலும் உள்ளன. ஜோதி லிங்கங்கள்    பன்னிரண்டின் பெயரையும் எவனொருவன் விடியற்காலத்தில் எழுந்திருந்து பயபக்தியோடு ஜபிக்கிறானோ அவன் பாவங்களிலிருந்து விடுபட்டு காரிய சித்தியை அடைவான். இவற்றைப் பூசிப்பவர்கள் பிறவி ஒழிந்து பகவானின் சந்நிதானத்தை அடைவார்கள்.

தொடரும் 
      
   




   








 அடுத்து,

சனி, 18 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-8

HAVE A NICE டே



                                               சிவ பூஜை 


சிவலிங்க தத்துவம் - 8
  திருமதி சாந்தா வரதராஜன்    


  ஆயிரத்தொரு நூறு ருதிராட்சங்களை ஒருவன் தரிப்பானகில் அவன் ருதிரஸ்வரூபியாக விளங்குவான். ஐந்நூற்றைம்பது ருதிராட்சங்களால் கிரீடம் செய்து அணிபவன் சிவசாநிதியத்தை அடைவான். உபவீதமாகத் தரிப்பதினால் அறுபது ருதிராட்சங்களை அணிய வேண்டும். முக்திக்கு ஒருவன் சிகையில் மூன்றும், இருகாதுகளிலும் ஐந்து அல்லது ஆரும்,கழுத்தில் நூற்றௌன்ரும், புஜத்தில் பதினொன்றும், இருகாதுகளில் சுற்றிலும் பதினொன்றும், மணிக்கட்டில் பதினொன்றும் பூணூலில் மூன்றும் அணியவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. ருத்ராட்சமனிகளைக் கொண்டு ஒருவன் நூறு முறை சிவநாமங்களை ஜபிப்பானாகில், ஆயிரம் முறை ஜபித்த பலனை அடைவான்.


    ருத்ராட்சங்களிலும் பலவகை உள்ளன. ஒரு முகம் உடையது சகல காரிய சித்தியை அளிக்கும். இருமுகம் கொண்டது லஷ்மிகடாட்சதை அளிக்க வல்லது. மூன்று முகம் கொண்டது நினைத்த காரியத்தை விருத்தி செய்யும். நான்கு முகங்களை  உடையது சதுர்வித புருஷார்த்தங்களையும் கொடுக்கவல்லது. ஐந்து முகங்களோடு கூடியது சகல பாவங்களையும் போக்கிவிடும்.


தொடரும் 


       












    












      

சனி, 11 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-7

HAVE A NICE DAY
      
                                                        சிவபூஜை 

சிவலிங்க தத்துவம் - 7
  திருமதி சாந்தா வரதராஜன்
  
   நைமிசாரண்ய வாசிகளான முனிவர்களுக்கு சூதமுனிவர் சிவமகாத் மியத்தை எடுத்துரைத்தார் என்றும் ஜோதிர் லிங்கங்களைப் பற்றியும் கூறினார் என்றும் சிவபுராணம் குறிப்பிடுகிறது. ருதிராட்சம் தரிப்பதின் பலன்களும் கூறப்பட்டுள்ளது. இவற்றை சுருக்கமாக நோக்குவோம். 


     சிவபெருமானின் திவ்விய சரிதங்களை ஒருவன் கேட்பானாகில் அவன் சகல பாவங்களும் நீங்கிப் பரிசுதனாகுவான்.அவன் மூலம் அவன் வம்சமே விளங்கும். நெற்றியில் விபூதியும், கழுத்தில் ருதிராட்சமும் தரித்து சதா சிவநாமங்களை உச்சரிப்பவனை ஒருவன் தரிசிப்பானாகில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன்கிட்டும். அவனிடத்தில் சிவநாமமே கங்கையாகவும், விபூதியே யமுனையாகவும்,ருதிராட்சமே சரஸ்வதியாகவும் விளங்குவதாகச் சொல்லப்படுகிறது.


தொடரும் 
   










               
   

சனி, 4 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-6

HAVE A NICE டே


    
                                                சிவபூஜை 


சிவலிங்க தத்துவம் - 5
  திருமதி சாந்தா வரதராஜன்

            சிவபெருமானை குறப்பிட்ட மலர்களால் அர்ச்சித்தால் அதற்கேற்ப பலன்கள் கிடைக்கும். தாமரை மலர்,வில்வம் சதபத்ரம் இவைகளால் அர்சிப்பவன் பெரும் தனத்தை அடைவான்.பரிசுத்தமான பத்துக்கோடி மலர்களால் சிவனை பூஜிப்பவன் ராஜபோகத்தை அடைவான். கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்கப் பன்நீராயிறது ஐந்நூறு மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். சத்துரு பயம் நீங்கப் பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.கோடி மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் ஞானம் உண்டாகும். ஐந்து கோடி மலர்களால் அற்சிப்பவனுக்கு முக்தி கிடைக்கும். அரைக்கோடி மலர்களால் அர்ச்சித்து ம்ரிதுனஜய மந்திரத்தை மந்திரத்தை ஐந்துலட்சம் உருஜபித்தால் சிவபெருமான் பிரத்யட்சமாவார். லட்சம் அருகம்புல்லால் அர்ச்சனை செய்பவனுக்கு தீர்காயுசு ஏற்படும். கருவூமத்தையால் அர்ச்சித்தால் புத்திரப் ப்ராப்தி உண்டாகும். லட்சம் கரவீர புஷ்பங்களால் அர்ச்சிப்பவனுக்கு சர்வ ரோகங்களும் நீங்கிவிடும். மல்லிகை அழகிய மனைவியையும், மலைமல்லி தானிய சம்பத்தும் கொடுக்கும். சண்பகம், தாழை ஆகிய இரு மலர்களும் சிவபூஜைக்கு உகந்ததல்ல. 


தொடரும்