OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

ஞாயிறு, 19 ஜூன், 2011

MANAKKULA VINAYAGAR,-5

HAVE A NICE DAY

அருள்மிகு மணக்குள விநாயகர்                     
                     

அருள்மிகு மணக்குள விநாயகர்-5
              புதுச்சேரி 
        திருமதி சாந்தா வரதராஜன்


                   பொன்போன்ற நிறமுடைய மேனியுடன் கற்பக விருட்சத்தின் அடியில் அமர்ந்து அருள் புரிகின்றார்.சித்தி,புத்தி (பிரமன் மகன்கள்) என்னும் இரு  தேவியரைக் கொண்டவர். "சித்தி  புத்தி'விநாயகர்'என்னும் பெயருடன் தமிழ்நாட்டில் அருள் பாலிக்கிறா.இவருடைய நான்கு கரங்களில் அங்குசம்,பாசம்,தந்தம்,சங்கு ஆகியவை உள்ளன.தும்பிக்கையில் கலசம் உடையதும்,மடியில் அம்மன் அமர்ந்தவண்ணம் உள்ளதும் ஆகிய திருமேநியினை இக்கோயிலில் காணலாம். தேவியோடு கூடிய கணபதியை வல்லப கணபதி என்பர்.வடநாட்டினர் இலக்குமி  கணபதி என்று வணங்குகின்றனர். இங்கு கணபதி,காத்தல் தொழில் செய்வதால் திருமாலாகவே பாவிக்கப்படுகிறார். கணபதிக்குத் திருமாலுக்குரிய சங்கு சக்கரங்கள் ஆயுதங்களாக உள்ளன.அதனால் அவர் மடியில் உள்ள தேவி இலக்குமியகக் கருதப்படுகிறார்.

     மணக்குள விநாயகர்  கோயிலை ஒட்டி வடப்புரத்தில் பெரிய திருமண மண்டபம் அமைந்துள்ளது.அவ்விடம் விழாக்காலங்களில் உர்ச்சவமூர்த்திக்குத் திருமஞ்சனம்,அலங்காரம் முதலியன செய்வதற்கும் மற்ற நாட்களில் வாகனங்கள் வைத்துக் காப்பதற்கும் பயன்படுகிறது.இக்கோயிலுக்குரிய வாகனம் களாக உள்ளவை சூரிய பிரபை ,சந்திர பிரபை,மயில் வாகனம்,அதிகார நந்தி, வெள்ளி யானை வாகனம்,கற்பக விருட்சம் ,வெள்ளி பெருச்சாளி ஆகியவை.இவற்றுடன் வெள்ளித் தேர் ஒன்றும் தங்க ரதம் (மரத்தால் செய்து தங்க ரேக் ஒட்டப்பட்டது) ஒன்றும் மரத்தேர் ஒன்றும் உள்ளன.

     பொதுவாக பூசைகள்,நித்திய பூசைகள்,நைமித்திய பூசைகள்,காமிய பூசைகள் என்றும் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. மணக்குள விநாயகர் கோயிலில் நித்திய பூசைகள் நான்கு காலப் பூசைகள் மட்டுமே நடைபெறுகின்றன.அவை காலை சந்திப் பூசை,உச்சிக்கால பூசை,சாயங்கால சந்தி, அர்த்த சாமம் என்பன. இவை முறையே,காலை  6.30 மணி, 11.00 மணி.மாலை,5  . 00  , இரவு 9.00 மணி அளவில் நடைபெறும்.இதனையடுத்துச் சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி ,மாசி மகம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பானவையாகும். 

தொடரும் 

    














   

















சனி, 11 ஜூன், 2011

MANAKKULA VINAYAGAR,-4

HAVE A NICE DAY


 மணக்குள விநாயகர் 

அருள்மிகு மணக்குள விநாயகர்-4
              புதுச்சேரி 
        திருமதி சாந்தா வரதராஜன்




      புதுவை மணக்குள விநாயகர் கோயில் வலப்புறச் சுவரில் கணபதியின் பல்வேறு வடிவங்கள் 'சுதை' உருவில் காணப்படுகின்றன.அவற்றுள் சில வடிவங்கள் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாது. அவை பின்வருமாறு : பார்வதியின் இடுப்பில் புத்திர கணபதி, ஆறுமுக கணபதி,மயில் வாகன கணபதி,விட்டுணுராச கணபதி, யோக கணபதி, துண்டி கணபதி,திருமணக்கோல சித்தி, புத்தி கணபதி, பார்வதி பூசை செய்யும் கணபதி, அதைப்போல சிவன் முருகன், நம்பியாண்டார் நம்பி, இராவணன் பூசை செய்யும் கணபதி, திரு உருவங்களும் உள்ளன. பிரகாரத்தில் தென்மேற்கு கோடியில் பால கணபதி கோயில் வெள்ளித்தகடு வேயப்பட்ட விமானத்துடன் காட்சியளிக்கிறது. இங்கு எழுந்தருளும் பால கணபதி நான்கு திருக்கரங்களையுடையவர். செங்கதிர் நிறத்துடன் குழந்தை திருமேனியுடையவர்.நான்கு கைகளில் மா, பலா,வாழை,கரும்பு இவற்றைத் தாங்கியவர்.இவரது துதிக்கையில் மோதகம் விளங்குகின்றது.


   இதேபோன்று வடமேற்குக் கோடியில் பால சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது.விமானத்தில் வெள்ளிதகடு வேயப்பட்டுள்ளது.''இளமுருகன் ' எனப்படும் இவர் ஒரு திருமுகமும், இரண்டு கைகளும் உடையவராய் வலக்கையில் தாமரை மலர் ஏந்தி, இடக்கையைத் தம் இடுப்பில் வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரது திருவடிகளில் இளமைக்குரிய கிண்கிணிச் சதங்கைகள் காணப்படுகின்றன.

   மேலும் சண்டிகேஸ்வரருக்கு சிறு கோயில் உள்ளது. மடப்பளியையடுது அலுவலக அறை உள்ளது. இதனைஅடுத்து உற்சவ மூர்த்திகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தில் சில கணபதி வடிவங்கள் காணப்படுகின்றன.அவற்றில் ஹரித்ரா கணபதி என்பவர் மஞ்சள் நிறமானவர்.நான்கு கைகளில் பாசம் ,அங்குசம் தந்தம்,மோதகம் இவற்றை தரித்திருப்பவர்.பக்தர்களுக்கு அபயமளிப்பவர் எனக் கூறப்படுகிறது.இவருடைய புருவம் வில்போல அமைந்திருப்பது சிறப்பு அம்சம்.நிறுத்த கணபதி அல்லது கூத்தாடும் கணபதி என்பவர் தனது கை விரல்களில் மோதிரம் அணிந்திருப்பவர்.ஆறு கரங்களையுடையவர்.பாசம்,அங்குசம்,அப்பம்,கோடரி,இவைகளைத் தரித்தவர்.

தொடரும்



    

         
http://www.amazon.com/Vinayagar-Agaval-Language-Tamil/dp/B000QLHTV6