OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 12 பிப்ரவரி, 2011

DHANVANTHIRI- MARUTHUVAKKADAVUL-6

HAVE A NICE DAY


 தன்வந்திரி பகவான்               
DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-6      


திருமதி சாந்தா வரதராஜன்          


            தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் எதிர்காலத் திட்டங்கள் பல உள்ளன. முதியோர் இல்லம், மருத்துவமனை, அன்னதானக் கூடம், தியான மண்டபம் போன்றவை அமைக்கத் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இத்தகைய பெருமையுடைய,சக்தி வாய்ந்த ஸ்ரீதன்வந்திரி பகவானை எளிய முறையில் இல்லறங்களில் வழிபடலாம். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டுப் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.தன்வந்திரி, திருமாலின் அம்சம் என்பதால் மகாவிஷ்ணுவின் படம் வைத்து அதற்குப் பொட்டு வைத்துப் பூப்போட்டு, துளசி மணி மாலை அணிவிக்க வேண்டும். தன்வந்திரி மந்திரங்களைப் பக்தியுடன் சொல்லி, 

  "அமுதத்தை ஏந்தி நிற்கும் அருள் கரத்தோய் சரணம் 
   குமுதச் செல்வி மணவாளன் குனவடியே சரணம் 
    சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம் 
    தாய்போல தரணி காக்கும் தன்வந்திரியே சரணம்"

 என வேண்டிக் கொள்ளவேண்டும். 

    தூய, தீபம் காட்டிய பின், பாயசம் நிவேதனம் செய்யலாம்.

    இவ்வாறு ஸ்ரீ தன்வந்திரி பகவானை மனதார வணங்கி வழிபாடு செய்தால் பக்தர்களின் இல்லம் நோய்கள் ஏதும் அண்டாத ஆரோக்கியமான வீடாக விளங்கும் என்பது திண்ணம்.

சுபம் 

   














   

















   

சனி, 5 பிப்ரவரி, 2011

KADHALIN SIRAPPU

HAVE A NICE டே



 LOVE
                                காதலின் சிறப்பு 
  கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன் 


    அன்பில் கனிவது காதல் 
    அகத்தில் நிறைவது காதல் 
    இளமையில் வளர்வது காதல் 
    முதுமையில் உணர்வது காதல் 


    கவிஞ்ஞனுக்கு கற்பனையே காதல் 
     கலைஞ்ஞனுக்கு சிந்தனையே காதல் 
    கடலைப்போன்றது காதல் 
    காழ்ப் பில்லாதது காதல் 


    குலம் கடந்தது காதல் 
    குறை காணாதது காதல் 
     தன்னலம் மறப்பது காதல் 
     தன்னையே கொடுப்பது காதல் 


    பலன் கருதாதது காதல் 
    பண்பை வளர்ப்பது காதல் 
    இதயத்துள் ஊற்று காதல் 
    இன்பத்தின் அருவி காதல் 


   காம உணர்வல்ல காதல் 
  கருத்தில் ஒன்றுவது காதல் 
   நாம ஜபமல்ல காதல் 
    நல்ல உணர்வே காதல் 


   எத்தனை துன்பம் ஏற்படினும் 
   ஏற்றுக்கொள்வது காதல் 
   அத்தனைக்கும் பதில் இன்பமதை 
   அள்ளிக் கொடுப்பதே காதல் 


                  ---------------------------