![]() |
LOVE |
கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன்
அன்பில் கனிவது காதல்
அகத்தில் நிறைவது காதல்
இளமையில் வளர்வது காதல்
முதுமையில் உணர்வது காதல்
கவிஞ்ஞனுக்கு கற்பனையே காதல்
கலைஞ்ஞனுக்கு சிந்தனையே காதல்
கடலைப்போன்றது காதல்
காழ்ப் பில்லாதது காதல்
குலம் கடந்தது காதல்
குறை காணாதது காதல்
தன்னலம் மறப்பது காதல்
தன்னையே கொடுப்பது காதல்
பலன் கருதாதது காதல்
பண்பை வளர்ப்பது காதல்
இதயத்துள் ஊற்று காதல்
இன்பத்தின் அருவி காதல்
காம உணர்வல்ல காதல்
கருத்தில் ஒன்றுவது காதல்
நாம ஜபமல்ல காதல்
நல்ல உணர்வே காதல்
எத்தனை துன்பம் ஏற்படினும்
ஏற்றுக்கொள்வது காதல்
அத்தனைக்கும் பதில் இன்பமதை
அள்ளிக் கொடுப்பதே காதல்
---------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments