OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

வியாழன், 7 ஜூன், 2012

sangada hara chathurthi viradham-6

HAVE A NICE DAY
                               2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
   
        விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-6
                    திருமதி சாந்தா வரதராஜன்                                 


          இத்தகய சிறப்புமிக்க சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கும் முறையை காண்போம்.முதன்முதலாக, சதுர்த்தி விரதம் ஆரம்பிக்க விரும்புவோர் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தில் இந்த விரதத்தை தொடங்க வேண்டும். அதுவும் செவ்வாய்கிழமைகளில் அமைந்தால் மிகவும் விசேஷம். சதுர்த்தி தினத்தன்று காலையில் ஸ்நானம் செய்துவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் விக்ரகம் அல்லது படத்தைப் பூஜையறையில் ஒரு மனைப் பலகையில் கோலம் போட்டு வைத்து, அதன்மேல் வைக்கவேண்டும். விநாயகருக்குப் பொட்டு வைத்து,பூச்சூடி அவர் முன்னால்  விளக்கேற்றி வைக்கவேண்டும் .


      தும்பிக்கையான் துதிகளை   மன்ம் உருகி,சொல்லி வழிபாடு செய்துவிட்டு,தூப,தீபம், நைவேத்யம் காட்டி வழபட்டு நமஸ்காரம் செய்யவேண்டும்."ஓம் கணபதயே நமஹா:" என்ற கணேச மந்திரத்தை வழக்கமான வேலைகளுக்கு நடுவில் அல்லது நேரம் கிடைக்கும்பொழுது மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டிருப்பது  நல்லது. மாலை நேரத்தில் சந்திரன் உதயமானதும் மறுபடியும் பிள்ளையாருக்குப் பூசை பண்ணிவிட்டு நிலவைப் பார்த்தபடியே சங்கடங்கள் எல்லாம் நீங்கவேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக் கொள்ள வேண்டும்.முடிந்தவர்கள்,அன்று முழுவதும் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பால்,பழம் சாப்பிடலாம்.இவ்வாறு சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்குச் சந்தோஷமும், சகல சௌபாக்கியமும்,சிறிதும் குறைவின்றிக் கிடைக்கும்.பக்தி உள்ளத்தோடு விரதம் இருப்பவர்கள் சங்கடங்களை எல்லாம் விநாயகர் தீர்த்து வைப்பார் என்பது திண்ணம்.


                                        சுபம் 

 திருமதி சாந்தா வரதராஜன்
சலங்கை பூஜை விளக்கு ஏற்றுதல்
சோளிங்கநல்லூர்