OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

punnagai siragugal nool veliyeedu

                         


    'புன்னகை சிறகுகள், நூல் வெளியீடு '

      இலக்கிய சாரல் பதினெட்டாம் ஆண்டு தொடக்க விழா. 31-7-2016 அன்று ஞ்ஞாயிறு காலை சென்னை மயிலாப்பூரில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் கவியரங்கம், நூல்கள் வெளியீடு, பரிசுகள் அளிப்பு ,விருதுகள் வழங்குதல் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அவ்வகையில் சமூக ஆர்வலர் திருமதி சாந்தா வரதராஜன் அவர்கள் எழுதிய 'புன்னகை சிறகுகள்' என்ற நூலை திருமதி ம.வான்மதி (ஆசிரியர் பாவையர் மலர்) வெளியிட திருமதி பாமா ரவி முதல் நூலை பெற்றுக்கொண்டார். நூல் ஆசிரியர் திருமதி சாந்தா வரதராஜன் ஏற்புரையாற்றினார். 

 இவ்விழாவில் திரு.கண்ணன் விக்ரமன் (நிர்வாக ஆசிரியர் இலக்கிய பீடம் ) , திரு. வைரபாரதி (திரைப்பட பாடலாசிரியர்) திரு. கன்னிக்கோவில் ராஜா (ஆசிரியர் . மின்மினி ஹைக்கூ ) உழவுக்கவிஞர் உமையவன் (தலைவர் இலக்கியச்சாரல் ) மற்றும் பல கவிஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 

      கவிமாமணி  இளையவன் (நிறுவனர் இலக்கியச்சாரல் ) நிறைவுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. 



ஞாயிறு, 3 ஜூலை, 2016

virudhu by sri sankaracharya swamigal

         



      ஸ்ரீ  ஜகத்குரு மாத இதழ் 
     
   4 ஆம் ஆண்டு தொடக்க விழா 

     ஸ்ரீ ஜகத்குரு ஆன்மீகத் தமிழ் மாத இதழ் 4ஆம் ஆண்டு தொடக்கவிழா 9-6-2016 மாலை சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ சங்கர மடத்தில் சிறப்பாக நடைபெற்றது. 
  
              ஸ்ரீ ஜகத்குரு ஆசிரியர் ஆர்.நாராயணன் வரவேற்புரை ஆற்றினார். 

           ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வருகை தந்து அருளாசியுரை வழங்கினர். இவ்விழாவில் எழுத்தாளர்கள் ஸ்ரீ ஆச்சாரிய ஸ்வாமிகளிடம் ஆசிபெறுதல், கும்மணம் ராஜசேகரன்  ( பா.ஜ.க. கேரள மாநிலத் தலைவர் ) அவர்களுக்கும் விஜய பாரதம் (தேசிய வார இதழ்) பத்திரிகைக்கும் விருது வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக பா.ஜ.க. தலைவர்கள் எச்.ராஜா,இல.கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். 
  
           இவ்விழாவில் எழுத்தாளர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். அவ்வகையில் எழுத்தாளர்களான எஸ்.வி.வரதராஜன், சாந்தா வரதராஜன் தம்பதியர் கௌரவிக்கப்பட்டு ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர்.சி.கனகராஜன் (ஸ்ரீ ஜகத்குரு இணை ஆசிரியர்) நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. 


வியாழன், 7 ஏப்ரல், 2016

irai mamani virudhu

                                                
                 இறைமாமணி விருது 

          சிவ நேயப் பேரவை, மகளிர் தின விழா சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் கடந்த மார்ச் 12ம் தேதி நடைபெற்றது. இதில் பேரவை தலைவர் ஈசனேசன் மகஸ்ரீ வரவேற்புரயாற்றினார். இன்னிசை கீதம், பரதநாட்டியம், வேதபடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 10 பெண்மணிகளுக்கு 'விருது' அளிக்கப்பட்டது.அவ்வகையில் கலை,இலக்கியம், ஆன்மீக படைப்பாளரான திருமதி திருமதி சாந்தாவரதராஜன் அவர்களுக்கு "இறைமாமணி" என்ற விருதினை சிவநேயப் பேரவையால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பல பிரமுகர்கள் கவிஞ்ஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்த்துரை 
வழங்கினார்கள். நன்றியுரையுடன் மகளிர் தின விழா இனிதே நிறைவு பெற்றது. 











   

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016