OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

ஞாயிறு, 16 மே, 2010

AKSHAYA THRITHIYAI -2


அட்சய திரிதியை 
                                                                                                திருமதி சாந்தா வரதராஜன்




   இனி இறைவர்களோடு அட்சய த்ரிதியைக்குத் தொடர்புள்ள சில புராணச் செய்திகளை சுருக்கமாக நோக்குவோம். சிவமும், சக்தியும் இணைந்த சிவசக்தியாக மக்கள் வழிபடுகின்றார்கள்.க்ரிஷ்ணபட்சதை அதாவது அமாவாசையாகத் தேய்ந்து போய்க் கொண்டிருந்த சந்திரன், வளர்பிறையாக மாறக் காரணமான சிவன் ஆசியளித்து திரிதியை தினம்தான். அதனால் வளர்பிறை திரிதியை தினமானது அட்சயம் என்ற சொல்லுடன் இனைந்து அட்சய த்ரிதியையாகச் சிறப்புற்றது.




  மஹாலஷ்மி, மகாவிஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்த தினம் வளர்பிறை திரிதியை தினத்தில் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.மேலும், குசேலர் வீட்டிற்கு வந்ததாக கதை. இந்தச் சம்பவம் நடந்த தினம் அட்சய திரிதியை தினத்தன்றுதான் என்று கூறப்படுகிறது. ஆகவே அன்று குசேலர் சரித்திரத்தை படித்தால் குடும்பத்தில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம். 


   மகாபாரதத்தில் துச்சாதனன் இராஜ சபையில் பாஞ்சாலியின் துகிலை உரிய ஆரம்பித்தவுடன், பாஞ்சாலி, தன் மானம் காக்கக் கதறி அழுதாள். அவளுடைய அபயக் குரல் கேட்ட கண்ணன், அங்கேயே இருந்து அட்சயம் என்று சொன்னான். திரௌபதியின் புடவை குறையில்லாமல் வளர்ந்தது. இந்தச் சம்பவம் நடந்ததும் திரிதியை தினம்தான் என்று இதிகாசம் கூறுகிறது. எனவே அன்று புதிய ஆடை வாங்குவது சிறப்பாகக் கருதப்படுவதால் இன்றும் இப்பழக்கம்  மக்களிடையே இருந்து வருகிறது. அகிலத்திற்கும் அன்னையாக விளங்கும் அன்னபூரணி உலகிற்கு அன்னம் அளிக்க ஆரம்பித்த தினம் ஒரு திரிதியை தினம்.




தொடரும் 


HAVE A NICE DAY.






         


  



HAVE A NICE DAY

1 கருத்து:

Please send your comments