OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 5 டிசம்பர், 2009

Thirchendhur-2

முருகப் பெருமானின் முக்கிய திருத்தலங்கள் 
திருச்செந்தூர் Part-3                                                                                           
 திருமதி சாந்தா வரதராஜன்                               
மாதம் தோறும் சஷ்டி கிருத்திகை போன்றவை முக்கிய நாட்கள் ஆகும்.               
 "வந்த வினையும்  வருகின்ற வல்வினையும் கந்தநென்று சொல்லக்கலங்குமே செந்தினார்செவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வாராதே வினை" 
என்பது நம்பிக்கை மேலும்,                             
"சாகா வரமும் தந்திடும்,உடம்பிற்,               
போகாப்பீடை போக்கிரட்சிக்கும்,வறுமை நீங்கும், வாழ்வு உண்டாகும்"                                                           
என்று திருச்செந்தூர் அகவல் தெரிவிக்கிறது.                                                                     
3.பழனி   
   தமிழ்க்கடவுளான திருமுருகன் கோவில்   கொண்டிருக்கும்  பல தலங்களில் இது தலை சிறந்தது. பழநியம்பதி மூன்றாம் படை வீடாகும். இதற்கு சிவகிரி,பழனாபுரி, பொதினி என்ற பெயர்களும் உண்டு. தமிழ்ச்சங்க நூலாகிய அகநானூற்றிலே இந்த பதி பொதினி என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த சொல்லே மருவி பழநிஎன்றாயிற்று என்பர். பழனங்கள் (வயல்கள்) சூழ்ந்த    
இவ்வூர் பழனி என்றும் கூருவர்.               


    இப்பழனி மலை மேற்கு தொடர்ச்சி மலையை சேர்ந்தது. இவ்வூர் கடல் மட்டத்திற்கு 668 அடி உயரத்திலுள்ளது. அம்மலையின் உயரம் 450 அடி. இம்மலையைச் சுற்றி வர 1 1/4 மைல்  தொலைவிலுள்ள ஓர்   
அழகிய சாலையும் அமைந்துள்ளது. பல சிறு கோயில்களும், சாதுக்களின் மடங்களும் அறச்சாலைகளும், மயில் மண்டபங்களும் அந்தக் கிரிவீதி மருங்கில் திகழ்கின்றன. மலைக்கு         
2 1/4  மைல் தூரத்தே ஷண்முக நதியெனும் புனித ஆறு ஓடிக்  கொண்டிருக்கிறது. இடும்பன் மலை அருகே எழில் பெற நிற்கின்றது. இயற்கை வளங்களின் நடுவே பழனிமலை நிற்கும் காட்சி கண்கவர் வனப்புடையது. அம்மலையின் மணிமுடிமேல் விளங்குவது இளங்குமரனின் திருக்கோயில்.                               
தொடரும்.                                                                 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments