OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 16 ஜனவரி, 2010

THIRUTHANI-3







உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- திருத்தணி-3
திருமதி சாந்தா வரதராஜன்   

 இரண்டாவது உட்ப்ராகாரத்தில் வந்து வலம் வரும் போது தெற்குப் பிரகாரத்தில் காமாட்சி ஏகாம்பரநாதர் சன்னதியும்,மேற்கு பிரகாரத்தில் ஆறுமுக சுவாமி சந்நிதியும், வடக்கு பிரகாரத்தில் குமரேலிங்கேர் சந்நிதியும், வடகிழக்கு மூலையில் ருத்ராட்ச விமானத்தில் உற்சவ மூர்த்தியும் கிழக்குப் பிரகாரத்தின் வடபால் ஆறுமுக நயினார் உற்சவ மூர்த்தியும், ஆபத்சகாய விநாயகர் சந்நிதியும், நவவீரர்கள், சூரியர் இவர்கள் சந்நிதியும் இருக்கின்றன.

  மூன்றாவது உட்ப்ரகாரம் செல்ல பஞ்சாட்சரப்படிகள் என்று ஐந்து படிகள் ஏறிப் போக வேண்டும். உள்ளே நுழைந்ததும் முருகப் பெருமான் திருக்கோலக் காட்சியைக் காணலாம். குமரக் கடவுளுக்குரிய பதினாறு வகை உருவங்களில் ஞ்யான சக்திதரர் என்றும் திருஉருவமே திருத்தணியில் இருப்பது. வலது திருக்கரத்தில் ஞான சக்தியாகிய வேலும், இடது திருக்கரம் தொடையிலும் அமைந்துள்ளன. விஷ்ணு ஆலயங்களில் சடகோபம் சாதிப்பது போல இந்த சந்நிதியிலும் முறுகர்திருவடி வணங்குவோர் தலையில் வைக்கப்படுகிறது. திருநீறு , சந்தனம் இவைகளும் வழங்கப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள சந்தனக்கல் பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் பயன்பட்டும் தேய்வுபடாமல் ஜோதி வீசுகின்ற அணுக்களுடன் காணப்படுகிறது. இதில் அரைக்கப்பட்ட சந்தனத்தை உட்கொண்டால் சகல நோய்களும் தீரும் என்பர். தணிகை பெருமானை வணங்கிய பின்னர், வடக்கே தேவயானை சந்நிதியும், தெற்கே வள்ளியம்மை சந்நிதியும் தரிசிக்க வேண்டும்.
   இங்கு விஷ்ணு தீர்த்தம், பிரமசுனை, இந்திரா நீல சுனை, முதலிய தீர்த்தங்கள் இத் தலத்தில் உள்ளன. கந்தரலங்காரத்தில்,
 "கோடாதா வேதனுக்கு யான் செய்த 
     குற்றமென்  குன்றெறிந்த 
  தாடாளனே தென் தனிகைக்குமரா 
       நின் தண்டையந்தாள் 
  சூடாத சென்னியும் நாடாத கண்ணும் 
       தொழாத கையும் 
  பாடாத நாவும் எனக்கே தெரிந்து 
        படைத்தனனே" 

 என்று வரும் பாடல் மிக அழகு படைத்தது.


தொடரும் 
                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments